<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-9397992</id><updated>2011-04-21T12:51:36.188-07:00</updated><title type='text'>...</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://pirathi.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9397992/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://pirathi.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>புதிய கனா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='20' height='32' src='http://www.imagesofceylon.com/people/p19-full.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>8</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-9397992.post-110185311314040913</id><published>2004-12-30T13:18:00.000-08:00</published><updated>2005-05-09T22:29:42.470-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;span style="FONT-WEIGHT: bold;font-size:130%;" &gt;முடிக்கப்படாத ஒரு பிரதியிலிருந்து&lt;br /&gt;சில பகுதிகள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;blockquote&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;span style="color:#006600;"&gt;~&lt;/span&gt;பிரதீபாதி&lt;span style="color:#006600;"&gt;~&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/blockquote&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;p&gt;&lt;img style="WIDTH: 368px; HEIGHT: 514px" src="http://www.weblogimages.com/v.p?uid=swapnam2000&amp;pid=264045&amp;amp;sid=cFJ22bpsK5" border="0" /&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="font-size:78%;color:#999999;"&gt;&lt;strong&gt;©புகைப்படம்: 'படத்தறை யன்னல்' &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;/blockquote&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9397992-110185311314040913?l=pirathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9397992/posts/default/110185311314040913'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9397992/posts/default/110185311314040913'/><link rel='alternate' type='text/html' href='http://pirathi.blogspot.com/2004/12/blog-post.html' title=''/><author><name>புதிய கனா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='20' height='32' src='http://www.imagesofceylon.com/people/p19-full.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9397992.post-111440778421271635</id><published>2004-12-29T21:28:00.000-08:00</published><updated>2005-05-06T23:41:36.416-07:00</updated><title type='text'>பகுதி I</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;a href="http://pirathi.blogspot.com/2004/12/blog-post_28.html"&gt;சந்திப்பு: ஜனனி&lt;br /&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;-&lt;a href="http://pirathi.blogspot.com/2004/12/blog-post_110187998992773693.html"&gt;உள்&lt;br /&gt;&lt;/a&gt;-&lt;a href="http://pirathi.blogspot.com/2004/12/english-newspaper-article-translated.html"&gt;ஆங்கிலக் கட்டுரை மொழிபெயர்ப்பு &lt;/a&gt;&lt;br /&gt;-&lt;a href="http://pirathi.blogspot.com/2004/12/blog-post_27.html"&gt;வெளி&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிரசுரமாகிய இடம்:&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;em&gt;உயிர்நிழல்&lt;/em&gt;, இதழ் 19, மே-ஆகஸ்ட் 2001&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9397992-111440778421271635?l=pirathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9397992/posts/default/111440778421271635'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9397992/posts/default/111440778421271635'/><link rel='alternate' type='text/html' href='http://pirathi.blogspot.com/2004/12/i.html' title='பகுதி I'/><author><name>புதிய கனா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='20' height='32' src='http://www.imagesofceylon.com/people/p19-full.jpg'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9397992.post-111561071232706138</id><published>2004-12-28T21:36:00.000-08:00</published><updated>2005-05-10T14:29:36.376-07:00</updated><title type='text'>சந்திப்பு: ஜனனி</title><content type='html'>&lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-size:13;"&gt;“அது என்னைக் கண்காணிக்கிறது”&lt;/span&gt;&lt;span style="font-family:'Arial Unicode MS';"&gt;&lt;?xml:namespace prefix = o /&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal" style="MARGIN-LEFT: 0.5in; MARGIN-RIGHT: 0.5in"&gt;&lt;b&gt;&lt;span style="font-family:Arial;font-size:10;"&gt;நீ -&lt;br /&gt;சிறு அறைக்குள், இராஇராவாய் சத்தம் போடுகிற உன் பழங் கணணியூடாய் உலகத்தைப் பார்க்க நினைக்கிறாய். கீழ் நகரத்தின் சந்தடிகளில் -வியாபார தந்திரங்களற்று- மறைந்துள்ள பழைய புத்தகக் கடைகள், வீதிப் பாடகன்கள் - பாடகிகள், ஓவியப் பெண்கள் - ஆண்கள், தம் மகா உன்னத வேலைப்பாடுகளைக் கழிந்த அற்ப விலைக்கு விடும் கஞ்சாவுக்கும் மது (வயது முதிர்ந்த &lt;em&gt;லிப்ஷ்ரிக் &lt;/em&gt;விழுற குறைந்த &lt;em&gt;றேற்&lt;/em&gt; விலை மாதுக்களும் சேர்த்த இன்ன பிற) வுக்கும் அடிமையான மகா சிற்பிகள், உன் தளத்தில் உனக்கு வலை விரிக்கவில்லை. இங்கே, இந்த நகரத்தில், அவர்களில் ஒருத்தியாக, என்னைத் தூக்கி நிறுத்தப் பிரமுகர்களும் வாய் ஜாலர்களும் பின் பட்டங்களும் அற்று, மழை நாளில் வளர்ப்பு நாய்களதும் வீதி மனிதரதும் மலம் மிதிபடுகிற இந்த வீதிகளில்தான் -என் வீறுகளுடன்,என் குழந்தைத் தனங்களுடன், என் அசட்டுத் தனங்களுடன், என் வேசைத் தனங்களுடன்- நான், வெகுகாலம், வாழ்ந்து வருகிறேன்.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family:Arial;font-size:10;"&gt;&lt;!--[if !supportEmptyParas]--&gt; &lt;!--[endif]--&gt;&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p class="MsoNormal"&gt;&lt;span style="font-family:Arial;"&gt;0&lt;br /&gt;ஒரு டஜன் சிலிர்ப்புகளை எடுத்தெறிந்து சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். உடம்பின் ஆடலும் பரவசமும், மகிழ்வின் போதையும் ஊறி ஊறி எழ பிரமிப்புடன் பார்த்து சிலநேரம்தான், என் கண்காணிப்பின் ஆதிக்கத்தை கொஞ்சமும் தாங்காதவர்களாய். அவர்கள் ஆட்டத்தின் விசையும் ஆரவாரமும் சுதி குலைந்து விழுகிறது. பொங்கும் உடல் அழைப்பை மறுத்து ‘காலம்காலமாய்’ ‘யுகயுகமாய்’ இந்த கோஷங்களுக்குக் கீழ்/ழும் -சத்தமில்லாமல்- bra விளிம்புகளூடே நான் கண்காணிக்கப் படுகிறேன். வெளியில் விளையாடுகிற அச் சிறுவர்களுக்கு மனிதர்கள் எக் குறுக்கீடுமற்று வெறுமனே போய்க் கொண்டிருக்க வேண்டும். அவ் உடல் கிறக்கு மாலையில், காதை நிறைத்த பூரித்த குரல்களின் ஓசையில், எழுச்சியுடன், என் பிரத்தியேகமான கறுத்த பையனின் புன்னகையால் ஈர்க்கப்பட்டு நான் அவதானித் திருப்பதை, அவர்கள் எள்ளளவும் அனுமதிப்பதில்லை. அதற்கெதிராக, முரண்டும் -செல்ல- எரிச்சல் ஒலியும், வெறுப்புமாய், என் இருப்பின் அநாவசியத்தை, உணர்த்தும் அவசியத்தைக் கற்றுத் தந்தார்கள். ”புல்வெளியில் படுத்திருந்து புத்தகம் படி, கனவு காண், போராடித்தால் கவிதை எழுது. கீறு, வேண்டுமானால் சிலநேரம் கவனிக்கவும் செய். ஆனால் கண்காணிப்பின் ஆணவத்துடன், செருக்காய்ப் பின்தொடராதே! அது எங்கள் உலகை அத்துமீறுகிறது.”&lt;br /&gt;அவர்கள் இப்போது உருபுகளாய் மாத்திரம். நான் எதிர்த்ததும், வீழ்ந்ததும், சிறுத்ததும் ஆன காலம். முதிர்ந்த மேபிள் மரங்களிலிருந்து இளம் தென்றல்.&lt;br /&gt;நீ வருவதாக சொன்னபோது, கறுப்பும் &lt;i&gt;ஒறேஞ்&lt;/i&gt;சும் கலந்த &lt;i&gt;நைலோன் பயாமா&lt;/i&gt; போட்டிருந்தேன். என் உடலையும், உணர்ச்சிகளையும் தூண்டி விடுகிற லத்தீன் அமெரிக்கப் பாடல்கள். என்னைச் சூழ்ந்திருக்கிற, அவற்றைச் சூழ்ந்திருக்கிற நம்பிக்கையும், தீரமும். காட்டு மரத்திலிருந்து விழுகிற கொப்புகளை கேட்டுக்கொண்டே, மங்கலா, மிக மங்கலா... கரடுமுரடான பாதைகள்ல பஸ் நகருது. ஒரு சோடி விழிகள் -சிறு விரல் பதிய- யன்னலுக்கு வெளியில் பாத்துக் கொண்டிருக்க, பஸ் கடற்கரை ஊடா ஓடுது. நெடுந்தூரம் கடல் காய்ஞ்சு போய், கரையில் உப்புக் குவியல்.&lt;br /&gt;கடகட எண்டு சென்னை எக்மோர் இல ரெயில் ஓடுது. மனசுக்குள்ள எப்பவும் ஒரு சின்ன ஊரில இருந்து யாழ்ப்பாணம் போன சிறுமியோட நினைப்பு.&lt;br /&gt;என்னை, அந்த நிகழ்ச்சிகளிலிருந்து விலக்கி, -இன்று- ’அரசியல் வேண்டாம் ’ என்கிற முன்மொழிதலுடன், ஆண்களின் கீழ் பெண்கள் நடத்தும் வானொலி நிகழ்ச்சிகளுக்கு வரும்படி அழைக்கிறாய். அந்த நிபந்தனையின் பிரகாரம், நான் ’அவர்களின்’ அரசியலைப் பேசாது விடுகிறேன்; அதன்பதிலாக, கோயில்களாகும் மதங்களின், விளம்பரங்கள் தாங்கும் பத்திரிகை சமூக சேவகரின், மாடியிலிருந்து குதிக்கிற பெண்களின் அரசியலைப் பேசுவேன். உங்களது ஊடகத்தில், ’சுவாமி --- 'ஐ எதிர்க்க முடியுமா? கேட்டால் அவர்கள் உனக்கு சொல்ல மாட்டார்களா, 'சுவாமிஜி யை நம்புவரின் மனதை எப்படிப் புண்படுத்துவது’ என!? எந்த உயிர்ப்பான அரசியலும், நிறுவனங்களுக்கும் வியாபாரிகளுக்கும் ஆண்களுக்கும் -அவர்களால் ஆன அதிகார குழுக்களுக்கும்- பிடித்தமானது அல்ல.&lt;br /&gt;எனினும், உயர் கட்டடங்கள் நிரம்பிய ஒரு நகரத்தில், வசிப்பதற்கான ஒரே பயனாய் பெரும் மழை அடித்துப் பெய்கிறபோது, பல்க்கனியிலிருந்து பாத்துக்கொண்டிருக்கிற இரசனைமிக்க ஆண் ஒருத்தன், அது கவிழ்க்கிற அபார இசை வித்தையை உணர விரும்புகிறவனாக தன் அங்கங்களின் இறுக்கத்தை தளர்ப்பான். அந்த ஆண், என்ன விதமான பின்னடைந்தவனாயும் இருக்கட்டும். அவனை எடுத்துக் கொள்கிறேன். என்னோடான எந்த விவாதத்துக்கும் ஆன்மாவைத் தளர்த்த அவனால் முடியும்.&lt;br /&gt;சங்கடம் தருகிற உன் வற்புறுத்தல்களைத் தொடர்ந்து, என்னை திறந்து பேசுகையில் அல்லது பேச்சின் சிக்கல்களுக்குள் அதை முயல்கையில், நிறுவனங்களுக்குரிய குணங்களை பரிசீலிக்கிற என் குடும்பத்தில், அவனைப்போல, நூறு சிறுவர் இருப்பார்கள். மரங்களின் நெடுமையைத் தொடர்கிற தாயின் வேட்கையை காணுகிற சிறுவர்கள். சில குழந்தைகளிடம் நீடித்ததான ஒரு வாசனை. அவர்கள் வாஞ்சைமிக்கவர்களாக, உடனிருப்பவர்களை கட்டி அணைத்துவிட்டு வெளியில் செல்பவர்களாக, வளர்வார்கள். அன்பு சூழுகிற உலகம், அம்மா ஆட்சி செய்த காலம், பாடப் புத்தகங்கள் சொல்கிற வீடு... தாய் என்பவள் தலைவியாக இருந்ததும், ஆண்களை ஆண்டதும், வேட்டையாடியதும், பொறாமைப் பட்டதும், உடமை தோன்றியதும் கதை சொல்லியால் சொல்லப்படுகிறபோது அவர்களின் உள்ளிழுப்பில் நான் என் சகல பின்னடைதல்களையும் மறப்பேன்.&lt;br /&gt;இன்று உனக்கும் எனக்கும் தேவையானது ’அரசியல் வேண்டாம் ’ என அரசியல் பேசிற இந்த தொடர்பூடகங்கள் அல்ல. செயற்பாடு. நீ சொல்கிற நிகழ்ச்சிகளில், என் நிறங்களை மாற்றி, ஒரு தலைப்புக்கு கீழ் பேசவோ, அதற்குள் என்னைக் கட்டுப்படுத்துதலை ஏற்றுக் கொள்ளவோ, நான் பேசப் படவேண்டும் என்பதற்காக எதையும் செய்துகொண்டு, உலகம் கொண்டாடும் அழகு, ஆணவம், அரைவேக்காடு சினிமா, நாடகம், வானொலி இவற்றில் மறைமுகமாக எதிரொலித்துக் கொண்டிருப்பதோ என்னால் முடியாது. எந்த அழகும், உலகம் கொண்டாடும் அறிவும் பிரம்மைகளும், எனக்கு வேண்டாம். என்னையும் எல்லோரையும்(போல) செலுத்திக் கொண்டிருக்கும் கடும் வேலைகளுக்குப் பிறகு, இறுதியாய், மண்டைக்குள் தங்கிவிடும் வெறுமை இல்; ஒரு இசையின், அதன் அதிர்வுகளுக்குப் பிறகு, எனது நம்பிக்கைகள் பலதை இழந்துவிட்டேன் என்பதன் உறைப் பில்; நான் சோர்ந்து போகிற போதில், ஓயா உளைச்சலுக்குள் இருந்து காற்று அசைய அந்த பல்க்கனியிலிருந்து பாக்கிற ஆண், என் சிறுவர்கள் போன்ற உன்னோடு, ஒரு காற்றைப் போல, பறவையைப் போல, அசையும் மரத்தைப் போல இயல்பாய், நான் பேச விரும்புவேன்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Arial;font-size:10;"&gt;&lt;br /&gt;--&gt; &lt;a href="http://pirathi.blogspot.com/2004/12/blog-post_110187998992773693.html"&gt;உள்&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;span style="font-size:0;"&gt;&lt;a href="http://pirathi.blogspot.com/2004/12/blog-post_110187998992773693.html"&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9397992-111561071232706138?l=pirathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pirathi.blogspot.com/feeds/111561071232706138/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9397992&amp;postID=111561071232706138' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9397992/posts/default/111561071232706138'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9397992/posts/default/111561071232706138'/><link rel='alternate' type='text/html' href='http://pirathi.blogspot.com/2004/12/blog-post_28.html' title='சந்திப்பு: ஜனனி'/><author><name>புதிய கனா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='20' height='32' src='http://www.imagesofceylon.com/people/p19-full.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9397992.post-110187998992773693</id><published>2004-12-28T21:34:00.000-08:00</published><updated>2005-05-09T22:27:51.343-07:00</updated><title type='text'>உள்</title><content type='html'>இருபத்தி இரண்டு. அம்மாவின் நூறு ரூபாய்த் தாள்களை வாங்கிக் கொண்டு வெளியேறினேன். நிலங்களை நம்பிய பெருவாரியான குடும்பங்களில், சரிந்த மண் வீடு. திருமண வயசு. -எனக்குப் பிறகு வளர்ந்த தனித்துவைக்கப்பட்ட தம்பி தவிர்த்து- நான் கடைசிப் பெண்ணாகப் பிறந்தேன். எனது அக்கா, நிலங்களை உடைய ஒரு பெரிய குடும்பத்து ஆணைக் கட்டி இருந்தாள். அவளுக்குப் பிறகும் முதலுமாய் நான்கு ஆண்கள் குடும்பமாய். அத்தானையும் சேர்த்து, குடி- குடும்பத்து ஆண்களின் இணங்குதளமாயிருந்தது.&lt;br /&gt;அங்கே பாஸ்கி என் தம்பியும் நானும் தனித் தீவுகளாய் உருவாகினோம்.&lt;br /&gt;நான் சிறுமியாய் இருந்தபோது நாங்கள் பனைமரங்கள் இருக்கிற அக்கா வீட்டில் இருந்தோம். அப்போது அது எங்கள் வீடாக இருந்தது. மாட்டுப் பட்டியில், சறத்தை உதறி மடிச்சுக் கட்டிற அப்பர். அவரோட நினைவு, சில திரைகளோட.&lt;br /&gt;மாலை மயங்கி விழும். பட அறையில விளக்கு நூந்து வெளிக்கும். இருட்டிக் கொண்டிருக்கும் மாலையில் மணலில் மாமர இலைசைவு குளிரடிக்கின்ற நேரம். உயரமான, மெல்லிய மண் நிற கோட்டுச் சறத்தால கொடுக்குக் கட்டி பனைமரத்தில ஏறிய கள்ளுக்காரன் போனபிறகு, ’அவுக’ குடிக்க ஆரம்பிப்பார்கள்.&lt;br /&gt;காற்றில் அவர்கள் காலத்துக்கரிய அந்தப் பாடல்கள் எழும்பி உச்சத்துக்கு இட்டுச் செல்லும். உள்இருக்கும் கதைகளை ’அவிட்டு’ விட்டபடி உரத்துப் பாடுகின்ற அவர்களுக்கென, சாணி அடுப்பு மேல் தொங்கியிருந்த கன்னங் கரும் மாட்டு வத்தல், வெங்காயம், ஊறுகாய் என ஏதாவது போய்க் கொண்டிருக்கும். ’ஒழுங்கு’டன், அவற்றை செய்வதற்கென அம்மா. சோடா மூடி, ’தண்ணீ’ அதுகளோடு ரகசிய விளையாட்டு விளையாடுகையில், அதை இதை எடுத்துக்கொண்டு போகுமாறு அவள் கட்டளையிடும்போது எனக்கு அவுக ளில் ஒருத்தியாய் இருப்பதே சுலபமென்று தோன்றும்.&lt;br /&gt;வன்னிக்கு எனது தலைமுறையின் தந்தைகள்தான் முதலில் வந்தார்கள். காட்டை அழித்து, வயல் செய்யக் குடிபெயர்ந்தார்கள். செவ்வரத்தம் பூக்களின் காலைப் பனியில் கொலுசெய்கிற சிவப்பழகு அவர்களால் வந்ததாம். எனக்காய் இருக்கிற நீள் சதுர வீடு -பிறகு- இதில் ஓடிப்போன அக்கா, பிள்ளைகளைப் பெத்தபடி வாழ, நாங்கள் முன்காணியில் ஓலைவீட்டில் பெயர்ந்தோம். ’தனித்தவர்’ வீடுகளைப்பற்றி, வெத்திலையை மடிச்சு, அமுக்கி வாய்க்குள்ள வச்சுச் சப்பியெண்டு அது வெளியில பறக்க, ஊர்க் கிழவி சொல்கிற கதைகளில், தம் கண்முன் வந்ததற்காக, தமது மூதாதையர் அவர்களை ’பீமட்டை தோய்த்து’ அடித்ததுக்குப் பெருமைப் பட்டுக் கொண்டது. வெள்ளையா உயரமா இருந்த அவளிற்கு, பக்கத்தில் இருந்த நவாவோடு சேர்ந்து தீவினை வைத்தோம்.&lt;br /&gt;நாலைந்து வீடுகள் தாண்டின, வாழைத் தோட்டங்களில்தான் பயமின்றி விளையாடலாம். இதுபற்றி அப்போது ஒரு கதை சொன்னான்: ’தாங்கள் ’ பயங்கர கெட்டித்தனமாக ஆக்கள் என்றும், அதுபொறுக்காமல் கதிரையில் இருப்பவர்கள், வெயிலில் போட்டு இப்படிக் கறுக்கினார்கள். ’ஆனால் பாவம்’ அவன் தொடர்ந்தான், ’’கறுப்பு அசிங்கமென்று அவர்கள் கருதினார்கள்.’’&lt;br /&gt;...&lt;br /&gt;இன்னும் மணற் பரப்பு கழிந்து மிருதுவான மண்தரையில் சைக்கிள் அமிழ்ந்தெழுகிற காட்சி. இடுப்பில் செருகியிருந்த சேலைத் தலைப்பைக் கலைத்து அம்மா வாயைப் பொத்திக் கொள்கிறாள். ஒரு ஒப்பாரிக்கான ஒத்திகை. பாஸ்கரன், அம்மா வளர்த்த என்ர தம்பி, எனக்குக் கீழ நின்ற பயல், என் பதினெட்டில் இயக்கத்துக் போனவன் தொடர் நான்காம் வருடம், நவா வப் போல் ஆனா நெட்டையா, ஒல்லியா, கறுத்தத் தேகத்தில நட்சத்திரங்களோட வந்து நின்றான். அவன் கம்பி ஐது முடி நிறை நீள் வட்டத் தலை. எனக்குத் தெரியாதவன் புதியவன் என்கிற நீட்டல்களை தடுத்து ’அக்கா ஒரு வேலையா வந்தனாங்’ கண்கள் கிடக்க, வாயால மலருற அவன் வெளிப்பட்ட கணம்; என் மார்பு, அவனது நெஞ்சுக்குக் கீழ் முட்ட, அணைத்த பரவசிப்பு, அவன் பற்களின் வசீகரம் சொல்ற ஒரு படமும் இல்லை, அவனது இருப்பு -தனித்தன்மை- அழகுகள், சின்னத்தனங்கள் எதுவுமே...&lt;br /&gt;அண்டைக்கு, நெஞ்சுக்குக் கீழ் இலாஸ்ரிக் வைத்துத் தைத்த கவுண் களில் ஒன்றைப் போட்டிருந்தன். அம்மாவின் ரூபாய்த் தாள்கள்; என் ரெண்டு மாசச் சம்பளம்! ஊர்: ஒருசில வெள்ளை அடித்த பெரிய வீடுகள். ஓலைக் குடிசைகள். தள்ளி, தனித்து வைக்கப்பட்டவர்கள். கடைசியா அவன்களில், நவாவிடம் போனேன். பதினாறு வயசில் --- பத்திரிகையில் ராகுல் இன் வொல்காவிலிருந்து பாத்துவிட்டு பகிர்ந்து கொண்டவன். ஊருக்கு வெளியால், வாசிகசாலைகளில் பெரியபெரிய புத்தகங்கள் கொண்டு வருகிற தோழன். மேற்தரையில், பால மர நிழல் விழுகிற அக்கா வீட்டு படலைக்குக் கீழ்வீதியில் அவனும் நானும் பிரிந்து போகாது கதைத்துக் கொண்டு நின்றிருப்பம். எம்முடன் காற்றில் அசையும் மர இலைகள்.&lt;br /&gt;சைக்கிளைச் சாத்திவிட்டு, தயக்கத்தோடு போறன், அவன் உதட்டைக் கடித்தபடி திரும்பி நின்றிருந்தான். சும்மா என்றால் அவன் நுண்ணிய காதில் ஒரு சிறு சலப்பே கேட்கும். ’’நவா’’ கூப்பிட, டப்பெண்டு திரும்பி, சிந்தனையின் சாரமே அது என்பதாய் கையப் பிடித்துக் கொள்கிறான், ’’உண்மையாப் போறியா.’’&lt;br /&gt;கொஞ்சம் சோர்வோட, அறுபட்டு விழுந்திருந்த சைக்கிளை எடுத்துக்கொண்டு திரும்பவும் அக்கா வீட்டு வீதி, கழிவுநீர் ஓடுகிற கரைப் பள்ளம் கழிந்து, வீடு வந்தன். அறைக்குள் போய், முகம் மட்டும் தெரியும் சதுரக் கண்ணாடியில், ’நான் போகோணும் ’ எனக்கே பிடிவாதமா சொல்லிக் கொன்றன். அவ் வரட்டு யாழ்ப்பாணத்தில் கண் முன்னால் நடந்த பயங்கரங்களுக்காக ஏனும். அண்டைக்கு வெவுப்படையில இருந்த பவானிட்ட வேண்டி அந்த கனமான ---கள போட்டுக் கொள்ளேக்க மார்பை எவ்வளவு அழுத்தின, அதே வல்லமையாயும்! சந்தடிகள் நெருங்க நெருங்க உடனே இழுத்துக் கடித்... அவ்வளவுதான்.&lt;br /&gt;குளத்துக் கட்டில் இருந்து அம்மா உடுப்புகளுக்கு சோப்புப் போட்டுக் கொண்டிருந்தா, தொட்டி மாதிரி நிறைஞ்ச தண்ணீர். பவானியின்ர அம்மா, பொட்டம்மா, அன்று ஒரு குழு மாடுபோல வந்தா. பட்டியில இருந்து உடைத்துக் கொண்டு வருகிற அதுகளிடம்தான் எத்தனை மூர்க்கம். ’’கற்பகம்’’ என்று அம்மாவின் சோப்புக் கைகள அறியாமல் கட்டிப் புரண்டு கதறினா.&lt;br /&gt;அவன்கள் அரை ரௌசர் களோடையும், நாங்கள் சீத்தை, சீலைத் துணிச் சட்டைகளோடையும் எல்லாக் குழந்தைகளையும் போல, சாதாரணமாய்த்தான் ஆரம்பித்தது அந்த வாழ்க்கை. கடந்த நூற்றாண்டுக்குரிய பாவனைகளும், ஒழுக்கங்களும் இருந்த போதிலும் வீடுகள் முற்றுகையிடாத காடுகள் தேடிய பருவம் அங்குதான் இருந்தது.&lt;br /&gt;பிரமிப்பு நீங்கலா, நீண்ட திரை விழுது.&lt;br /&gt;சின்னப் பிள்ளைல, மயிர்களுக்குள்ளிருக்கிற உறுப்பாய், மரங்களுக்குள்ளால ஓடுற ஆற்றுக்கு அப்பரோடு போவம். சின்னச் சின்ன நத்தைகள், ஓடுகள், சங்குகள், சில் லென்ற குளிர், ஒற்றைப் பாதைகள். ரொம்பவும் நீளமான நதி; எனக்கெப்பவும் அதன் முடிவைப் பாக்கும் கெலி. ஆற்றுக்குப்போன கொஞ்ச நேரத்தில் நான் ஆரம்பிப்பன், ’’இனி முடிவுக்குப் போவம்.’’&lt;br /&gt;ஏதாவது சமாதானத்தில, நான் மறந்து போய் நகர்ந்து, பின் வீடு திரும்புகிற பிறிதொரு பொறியில் மீளவும் ஆரம்பிப்பன், ’’அப்ப கடல்?’’&lt;br /&gt;அலுப்பு, சமாதானம், நம்பிக்கை, விதி இத்தனை சுமையுடன் அவர் சொல்வார்:&lt;br /&gt;’’வளர்ந்தோண்ண எப்பவாவது கடலுக்குப் போவதானே பிள்ள.’’&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;...&lt;br /&gt;குடிசை வீட்டு வெளிக் கூரைக்குள் நின்று, வானத்தை -கண்களுக்கு மேல் ஒளி குத்துவதை மறைத்து கை வைத்து மறைத்து- ப்பாத்து நிற்பேன்; எனது சிறுவர்கள் வருவார்கள். பாடல்களும் நடனமுமாய், எங்களது இனிய கனவுகள் நடந்தேறும். படலைகளில் படர்ந்திருக்கிற குடிகாரன் தும்பிகளால் மாலைகள் தொடுத்து மாலையின் இரவுக் கலவி வரை, பாடல்கள், பாடங்கள் சொல்லிக் கொடுத்தபடி இருப்போம். ஊரின் பல இடங்களின் புத்தர் சிலை மற்றும் உடைந்த பௌத்த விகாரைத் துண்டங்கள் கண்டெடுக்கப்படுவது பற்றி, நம்பப் பழக்கப் படுத்தும் வரை எதையுமே நம்பா அத் தலைமுறை சிறுவர்கள்தான் கேள்விகள் கேட்பார்கள்.&lt;br /&gt;அங்கும் எனக்கொரு பிரத்(தி)யேக சிறுவன் இருந்தான். அவனது அம்மாவிற்கு (ஓவிய மூலம்: ’நித்யகல்யாணி’) தனித்துவிடப்படாத ’உயர்ந்த’ வர்களில் ஒருவனால் பிறந்தவன். அவனும், அவனது நண்பர்களும், எனது தம்பி பாஸ்கியும்- நானும் நவாவும் பேசுவதைக் கேட்க வருவார்கள்.&lt;br /&gt;ஒருநாள் அவன் இந்தப் பாடலைப் பாடக் கேட்டான்: ’அழகிய கறுப்பின் பையா, உன்னிடமிருக்கிற கறுப்பில், பின்னி ஓலை எடுத்து, சூரியனின் சூடு எரிக்கிற குடிசைகளை மேய்வோம்’ எனும் எழுச்சியுடன்(!) ஆரம்பிக்கும். அதில் மீதியை நவாதான் எழுதினான். ’’உனது தாயின் அவன், வைத்திருந்த பசப்பு நிறம் உனக்கு வரவில்லையென பேசிக் கொள்கிறார்கள், உனது கூரிய கண்கள் அழகாய் இருப்பதால், அவனுடையதோ என சந்தேகப்படுகிறார்கள், ஆனால் அழகுக் கறுப்புப் பையனே, நீ வைத்திருக்கிற உன் தாயின் வசீகரச் சிரிப்பை, அதன் ஒளியின் வீச்சை அந்த முசுட்டு அவனோடு இவர்களால் ஒப்பிட முடியுமா?’’&lt;br /&gt;பின்தள்ளப்பட்ட சிறுவர்களிற்கு, அவர்களின் பலத்தை உணர வைத்தல். அதுதான் நாங்க குடுத்த வகுப்பில பிரதானம். வெளிப்படையான எதிர்ப்ப சொல்ல எவனுக்கும் வக்கில்ல. நவா, வேம்பில சாஞ்சு கொண்டு பேசிக் கொண்டேடட இருப்பான். உணர்ச்சி வசப் படுவான். கோவப் படுவான். நிதானமாவான்... கருகருவென்ற நிறம், மினுங்கிற... முன்பற்கள் இரண்டும் நெழிந்திருக்கிற, தலையில் சுருள் சுருளாய் கொத்துக்களாய் மயிர்கள் நிறைந்த, மெல்லிய சிறு தேகத்தில் உள் நுழைக்கிற எலும்புகள் தெரிகிற நவா.&lt;br /&gt;...&lt;br /&gt;தனித்தவர்களை தேவைக்காக இழுத்துக் கொண்ட குழுக்களின் தோன்றலில், ’சந்தைக்காக என்னைத் தயார்படுத்தாதே அம்மா’ என்ற இடையறா வேண்டுதலுடன் நான் வளர்ந்தேன். ஒரு சாதாரண மனித மூளையின்ர, இரண்டு மூண்டு குழந்தை அல்லது அதுக்கு மேல வருமானமும் capable ஆ இருந்தா இன்னும் சில குழந்தைகள். வீடு வருமானம் ரீ கொfபி ஊத்தி வழியில விழி வைக்கிற மனைவி போன்ற கல்யாணம் கட்டோணுமெண்டிறதுக்காக கல்யாணம் கட்டி, குழந்தை பெறோணுமெண்டிறதுக்காக பிள்ளை பெறுற ‘ideal’ உருவாக்கம் இருக்கேல்ல.&lt;br /&gt;வழியில், மகளிர் அமைப்பு! கனவுகளோடு பெரிதாய் ஒரு எழுச்சியோடு போன எனக்கு அங்கிருந்த ஆதிக்கத்தை தாங்க முடியவில்லை. எல்லா ’செயல் பட்டியலுக்குப் பிறகும்’ 'ஒரு தலைமை'யைத் தூக்கி முடிக்கிற அமைப்பில் கண்ணை திறந்தபடி இருக்கும் சாமர்த்தியமும் பத்தாததால், -ஒரு காலில் பலத்துடன்- வீடு திரும்பினேன். உனக்குத் தெரியும், வீட்டை விட்டுப் போன பெண், அவள் எப்பேர்ப்பட்ட போராட்டத்துக்கு தன்னை ’அர்ப்பணித்திருந்தாலும்’ ஆணைப்போல் திரும்ப வரவேற்கப்படுவதில்லை. விநோதமான புத்தகங்களைப் படித்த அம்மாவைக் குறை கூறிக்கொண்டே என் அப்பாவி அப்பர், எனக்காக நிறைய முயன்றார்.&lt;br /&gt;அப்பரோட எனக்கிருந்த உறவு, காதலும் வெறுப்பும்தான். எம்முள் நிலக்குடும்பங்கள் தாங்கிய இடைவெளி. எங்களை நிராகரிக்கிற உரிமையை ஒவ்வொரு ஆணுக்கும் தருகிற திருமண வியாபாரத்தை, எங்களின் தன்னம்பிக்கையை உறிஞ்சும் அந்த கணங்களின் மௌன வெறியை, அப்பரின் திருப்திக்காக என்கிற பெயரில் செய்தன். போலித்தனங்களை கேள்வி கேட்காத மட்டும், நாங்களும் தவறுக்கு உடந்தையானவர்களாத் தானே இருக்கிறோம்.&lt;br /&gt;எந்த அமைதிக் கோட்பாடும் இன்றி, கால் ஒன்றில் பலம் நிரம்பிய பெண்ணை எவன் தொட விரும்புவான்? இறுதிவரைக்கும் ’பொல்லாத புத்தகங்கள்’ அவள சீரழிச்சிற்று எண்டு அங்கலாச்செண்டுதான் அப்பர் போனாராம். ஊர் வீட்டில இருக்கிற உலக நாவல்களுக்குள்ளால கிளம்பின நம்பிக்கை அப்பருக்கு தெரியாது.&lt;br /&gt;எதுவும் புலப்படாத இரவுகள்ல, தூரத்தில பாடுற பறவையை அடையாளப்படுத்த முயன்றபடி, படுத்திருப்பன். நம்பிக்கையுடன் நம்பினவை பொய்த்து ஆயுதங்களாய்க் கிடந்தன.&lt;br /&gt;அவன திரும்ப சந்திப்பன் என்றுறதுக்கான சாத்தியங்கள் எல்லாமே அழிஞ்சுப் போச்சு.&lt;br /&gt;பெண்ணால இலட்சிய மிக்க ஆண்கள் தடம் புரளுவார்கள் -பழைய ’அவங்கட’- கண்டுபிடிப்பு எவ்வளவு அபத்தம். ஆத்மார்த்தமான தழுவல்கள்கூட அபூர்வமாய். அவ் உறவில், உலகத்திற்காக, மனிதர்களுக்காக, இந்தக் குழந்தைகளுக்காக நாங்கள் எத்தினை தடவை மண்டையை உடைசிருப்பம். ’அப்பிடிச் சொல்லேலாதுதானே ந... ’ சொல்லி முடிக்க முன்னம், அவனோட பற்கள் ஒளிரும்.&lt;br /&gt;எனக்கெண்டா நான் காணுற எல்லாப் பிரத்தியேகமான குழந்தைகள்லையும் அவன் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறதா தோணுது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;(நிறுத்தம்)&lt;/strong&gt;&lt;br /&gt;நான் கடலால் ஆளப்பட்டவள். நதியாய் அடையாளப்படுத்த முடியாதபோது அலைகளால் பரிகசிக்கப்பட்டவள். நான் சின்னப் பெண்ணாய் இருந்த போது, என் வீட்டு பக்கத்தில் இருந்து, அந்தப் பெண்களை பாத்துக் கொண்டிருப்பேன். பெரிதாய் சிரித்துக் கொண்டு, கோஸம் போட்டுக் கொண்டு, தலை முடியை வெட்டி அல்லது மடித்துக் கட்டி, பேர் அலையைக் கிழித்துச் செல்கிற கப்பலாய் அசைந்தசைந்து போகிற பெண்கள். குடிகார நாயகர்கள் கண்களை முறிக்கிற பலம் மிகுந்த அவர்கள் ஏதோ ஒரு வகையில் கவனிக்கப்படுகிறார்கள், பின்தொடரப்படுகிறார்கள் என்று ஏக்கமாய் இருக்கும். நான், அவர்கள் செல்லும் கூட்டங்களில் அவர்களுக்கு அருகே, -மிக அருகே- கவனிப்பு வேண்டி தொடர்ந்தேன். அவர்கள் பெரிதாக சிரித்தபடி என்னைக் கடந்து செல்வார்கள். அந்த கூட்டத்தில் இருக்கும் நான்காமவது ஆண் என்னை கவனிப்பதை இட்டு எனக்கு பெருமை இல்லை. அந்தப் பெண்கள்... நான் வளர்ந்து, அவர்களை கேள்வி கேட்பவளாக உருவானபோது, எவ்வாறு அவர்கள் என்னை மறுத்தலித்தார்கள்? ஏனெனில் அவர்களின் போலித்தனங்களை நான் சாடினேன்.&lt;br /&gt;என்னால் இந்த பாடல்களில் மயங்க முடியும். என்னை இழந்து ஒருவனுக்காய் ஏங்கவும் முடியும். அவன் உயரமானவனாக, திடகாத்திரமானவனாக, அதிகாரம் செலுத்துபவனாக, எப்போதும் &lt;em&gt;மீடியா&lt;/em&gt; வில் தனது ஆண்மையை பரிசீலிப்பவனாக, பெண்களின் மார்பகங்களை உற்று நோக்குபவனாக, அவர்களை மனதுள் நிர்வாணமாக்கி மகிழ்பவனாக, இத்தனையுடனும் என்னை நேசிப்பவனாக! உலகத்தில் எது தெரியுமா அதி உச்சமான ஆதிக்க உணர்வு, அது உன் உயிரோடு இருக்கிறது. நீ நிதம் நிதம் மனிதர்களை அவனுக்கு அவள் சரியில்லை அவளுக்கு அவன் சரியில்லை எனச் சொல்லுகிறாய். எப்போதும் நீ அதன்மூலம் இந்த &lt;em&gt;மீடியா &lt;/em&gt;தருகிற பிம்பங்களை தொடர்ந்தபடி இருக்கிறாய். எ/உனக்கு உயரமான -வயதிலும், உடம்பிலும்- அதிகாரம் செலுத்துபவனான ஒரு ஆண் தேவைப் பட்டுக்கொண்டிருக்கையில் உ/என்னையும் நான் புதிதாய்ப் பாக்கிறேன். நீ எனது எதிரியாக நிறுத்தப் பட்டிருப்பதற்கு, இந்த இரு அதிகார உலகங்களும் எவ்வாறு தொழிற்பட்டன என நான் தேடிச் செல்கிறேன். இவற்றினூடாக, என்னைக் கேள்வி கேட்பதை நான் விரும்பினேன். முதலில், உரிமை எடுத்துக் கொள்வது மற்றும் நான் இவனின் ஆளாக இருக்க வேண்டியதன் அவசியங்கள் பற்றி. இன்னாரின் ஆள் என்பதே என்னை மீறிய ஒப்பந்தமாகத் தோன்றியது.&lt;br /&gt;எனினும் அவனது பெயரோடிணைத்து எனது பெயரை எழுதினேன் (உச்சக் குரலில்), அதை யாருக்கும் தெரியாமல், மறைமுகமாய் எழுதினேன். எழுத எழுத சுகம் தந்தது, தேவ சுகம்! அது உடம்பை அளைந்து மயக்க, என் இருப்புக் கட்டில்க் கம்பியின் தடிப்பில் ஒரு இறைஞ்சலோடு இழைந்து போனேன்.&lt;br /&gt;(சலிப்போடு) தோன்றுவதைப் பகிரங்கமாய் சொல்லாது, சமயத்தில், புதுமையானவர்களாய் நமக்கு நாமே காட்டிக் கொள்ள வேண்டியிருந்தது. காட்டிக் கொள்ளல் எனக்கு சரிவரவில்லை. இந்தக் காலத்தில், ’கண் பார்த்துப் பேசிற பெண்ணப் பாக்க எனக்கும் பயமாயிருக்கு’ என்றபடி&lt;br /&gt;வாசலில் அவன் அறிமுகமானான். அப்புறம், இலக்கியம், பெண் உலகம் ஆண் உலகம் என. ’விபச்சாரி தனதுடம்பை மூலதனமாக்குகிற -பெண் உடம்பு அவளோடது என்கிறதை உணர்ந்த- ஒரு மறுவாசிப்பு செய்ய வேண்டிய பிம்பம்’ என்பதுபோன்ற தோரணைகளோடே எப்போதும் பேசுவான். அதை, அவள் விடுதலையின் கூறாய் உணராத பட்சத்தில், உன்ர மறுவாசிப்பெல்லாம் எந்த மசிருக்கு எண்டு நான் கேட்கிற, அப்படியான சமயங்களில் எல்லாம் அவனோட ’அந்த ஆண்’ மற்ற ஆக்கள திரும்பிப் பார்த்து பார்த்து அதிர்ந்து போய் நிற்பான். அவனப் போல என்னால் சாவகாசமா ------- எல்லாம் படிக்கவோ, அவன் சொன்ன பெண் எழுத்தாளர்கள்ல தொடர்ந்து ஆர்வங் காட்டவோ முடியேல்ல. இந்தியன் ஆமி என்ன நடுவீதியில மிதிச்சு நான் ’திராங்கி’ போட்டுப் பூட்டிக் கட்டி காத்த கற்ப அளிச்சத பாத்துக்கொண்டு, ’நீ ஒழுங்கான உடுப்புப் போட்டிருக்கலாந்தானே’ எண்டு அவங்க குரூரமா சிரிச்சதா நான் உணந்தத மறந்து, சாவதானமா அவங்களபற்றி அவனப்போல ’இந்தக் கதை நல்லம், இது கூடாது’ எனத் தரம் பிரிக்க முடியேல்ல. உணர்ச்சிகளுக்கு இலகுவா ஆட்பர்ற என்னோட முட்டாள்த்தனமாக்கூட இது இருந்திருக்கலாம். அதுகளுக்காக நான் எப்பவும் வருந்தேல்ல. அதிலதான் நான் ஒரு மனுஸியா உணர்ந்திருக்கிறன். என்ன இழிவு படுத்தின அவங்கட சப்புக் கொட்டல்களும் தேசிய உணர்வும், என்ன எவ்வளவு அடிமைப் படுத்திச்சு எண்டிறத நான் நேரடையா உணர்ந்திருக்கிறன். அதனூடா அவன் நம்பின நிறைய விசயங்கள நான் உடைச்சுப் போட்டது அவனக் காயப் படுத்திச்சு. ஆனா, வர்க்கப் பிரச்சினைகள் மாற்றங்கள் என்றெல்லாம் விவாதத் தளத்தில உடனடியா ஏற்றுக் கொள்ற இவங்கள் பெண் சார்ந்த எதிலும் sensitive ஆ அதிர்ந்து போறத எந்த எழவாலயும் என்னால ஏற்க முடியேல்ல. பெண்கள்தானே இவங்கட தாழ்வுநிறைந்த முறிவுகள பாதுகாக்கிறது, பலியாகிறது எல்லாம்?&lt;br /&gt;அவன் பேசற பெண் எல்லைய நான் மீறேக்குள்ள, அவனால மேல பேச முடியாதபோது, என்னட்ட ’வாதத்தில’ தோத்துப் போறதாத்தான் அவன் முதல்ல நடந்தான். அப்ப, என்னோட ’வாதத் திறமைக்கான’ காரணமா, ’பெரு நகரத்தில், உயர்மட்டக் குடும்பத்தில் பிறந்த பெண்ணுக்கு ஆங்கிலமும் பிற புலமைகளும் அதிசயமில்லை’ என்று சொன்னான். நான் கேட்டன், 'நகரப் பெண், உயர் மட்டமென்று எதை வைச்சுக் சொல்ற.' ஆங்கில உச்சரிப்பும், அவ்வாறு நினைக்கத் தூண்டும் எம் பிம்பங்களும், அவை தருகின்ற அனுமானங்களும் சகலவற்றிலும் எவ்வளவு வரட்டுத்தனமானது?&lt;br /&gt;அவற்றை மீறி, என்ர ஆர்வத்தப் பாத்திற்று, அவன் தேடித் தேடிக் கூட்டிப் போன ஓவியக் கண்காட்சிகள் நினைக்கும்போது, ரம்யமாயிருக்கு... ஒத்துக்கொள்றன், அந்தக் கண்காட்சிகள், மக்களோட தொடர்புபடுத்தப்படேல்ல, நவீனம் வசதியிருந்த சிலபேருக்காகத்தான் அப்பவும் இருந்தது. திரும்பி வரும்போது, கொஞ்சும் குரலில் இன்னொரு ஆன்மா என்னுடன் கூடி, அசை போடுகிறது கிராமத்து இளம் பிராயங்களை. பிரத்(தி)யேக சொற்கள் சகலர்க்கும் இருக்கும். எனக்குள்- விசாலமான ஒருவனின் இதயம் கடாசிய உணர்வுகள் போல.&lt;br /&gt;மக்களோட கூச்சல்கள இரசிக்கப் பழகி, நகர வழிகள் நெடுக நெருசல் தெரியாம நடப்பம், அப்போது தோன்றுகிற லயம், சேருகிற சுருதி சாதாரண மனிதர்களோடான எனது உறவைக் காதலைப் பாடுவது கேட்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;(அதை உள்வாங்கல்)&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவன விட்டுப் பிரிஞ்சு இங்க வந்த பிறகு, எனக்குள்ள சிதறுது அலை விந்துக்கள், கனவிலும் பகலிலும், ஒரு ஓயா நினைவா.&lt;br /&gt;...&lt;br /&gt;நான் நேசித்த அவன், என்னிலும் உயரம் குறைவானவனாக இருந்தான். இன்னும் அவனோடு செல்கையில் நான் ஆளுமை செலுத்துபவளாக, குரல் உயர்த்துபவளாக, முடிவுகளை முதலில் நெருங்குபவளாக இருந்தேன். புத்தகத்தில் மாத்திரம் தாய்வழிச்சமுதாயம் அதுஇது என சப்பித் துப்பிய ஒவ்வொருவரும் என்னோடு அவனை நினைத்துப் பார்க்க கஸ்ரமாக இருந்ததென்றார்கள். நான் கேட்டேன் ’ஏன் நீங்கள் நினைத்துப் பாக்கிறீர்கள்?’. நீங்கள் எழுதும் கதைகளை, படுக்க விரும்பும் சினிமா நாயகியை-நாயகரை நினைத்துப் பாருங்கள். ’ஏன் என்னை நினைத்துப் பாக்கிறீர்கள். ’&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;அது என்னை கண்காணிக்கிறது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:180%;"&gt;அது என்னை தடுமாற்றுகிறது.&lt;/span&gt;&lt;br /&gt;என்னை நோக்கி வெளியில் வா எனக் கூக்கிரலிட்டபடி கன்னிப் பெண்களை தொடும் கனவுகளுடன் திரியும் ஒவ்வொரு அறிவின் ஜீவியும் நான் எதிர்க்கும் ஒவ்வொரு அடக்குமுறைகள் என எண்ணினேன். அப்போது அவர்கள் அவனுக்குள் நான் அமிழ்ந்து போனதாக, நீ ஒரு பிற்போக்குவாதி என்றார்கள். ஓ! யார் இல்லையென்றது.&lt;br /&gt;&lt;em&gt;(சிறிது கோபமாக)&lt;/em&gt; என்னுடம்பின் ஒவ்வொரு கலங்களுக்கும் நான் கொடுக்க வேண்டிய விலை அநியாயமாய் இருக்கிறது.&lt;br /&gt;செதில்கள் பிராண்டப்படுற மீன்கள் எரிச்சலை மூட்டுகின்றன. நான் நேசித்த, மதித்த, நட்பு பேண விரும்பிய எத்தனையோ பெண்களை இவர்கள் எனக்கு அறிமுகப் படுத்தினார்கள். ’அவளிட வடிஞ்ச உடம்பு, மற்றவளிட ---.’ பேர் அறிவும், போராட்ட திறனும், பலமும், அதன்மூலம் என்றுமே அழியாத அழகும் நிரம்பிய அந்தப் பெண்கள் வெறுமனே வடிந்த, வடியாத நடமாடும் உடல் பிண்டங்களாய் அறிமுகமாவது எத்துணை துர்ப்பாக்கியம்?&lt;br /&gt;இராக் காலங்களில் பல்லும் மனசும் நறும கிடக்கிற நாளிகைகளில் உணர்ந்தேன், என் எல்லைகளின் தீர்மானிப்பு என் எல்லைகளுக்குள் இல்லை. உயர்வானவள் நான்! என் உடம்பு, அது வடியும், ஆடும், எழும்பும், சிலவேளை அசிங்கமாயும் மல்லாக்கும் ஆனாலும் அதன் தன்மைகளோடு, காலங்களோடு, எழுச்சிகளோடு அது உயர்வானது. என்றென்றைக்குமாய், இவர்கள் என்னிடம் எதிர்பார்ப்பதெல்லாம், சந்தையில் விபரிக்க மற்றொரு பிண்டம்.&lt;br /&gt;இவர்கள் விருப்பின் பிரகாரம், ஒருபோதும் நான், எனதுடம்பை பரிசோதனைக் குழாயாக்க நினைக்கவில்லை. அதோடான எனக்குரிய தோழமையை மதிக்கிறேன். உண்மையா வாழ்ந்ததா, என்னோட மனிதர்களோட நான் நேசிச்ச மனிதர்களோட என்னோட உடம்பும் ஆன்மாவும் ஒருங்கே பேசினதா நினைக்கிறன். அவங்க என்னட்ட இருந்து கற்றுக் கொண்டிருக்க வாய்ப்பில்ல. என்னப் பொறுத்த மட்டில ஒவ்வொரு காலத்திலும் தளதள எண்டு ஒரு நடிகை வர்றத எதிர்பாக்கிற பாமரங்களப் போலதான் இவங்களுக்கு நான் ’ஒரு காலத்து நடிகை.’&lt;br /&gt;அவர்களுக்கு ஆண்களாய் இருப்பது வசதியாயிருக்கிறது. எத்தகைய தத்துவங்களை பேசினாலும், பெண்கள் விஸயத்தில் எந்த உடம்படிக்கைகளுக்கும், எந்த மாற்றங்களுக்கும் -இறக்கும் முன்னம் இன்னும் எத்தினை பேருடன் எனக் கணக்குப் போடும்- அவன்களில் ஒருவனும் தயார் இல்லை. இதில், விளம்பரப் பலகைகள், பத்திரிகைகள், திரைப் படங்கள் எல்லாமே தோளுக்குக் கீழ் பெண்மையும், மேல் ஆண்மையும் என காட்டித் தொலைக்கையில் எங்கிருந்து வரும் மனிதர்களுடனான சம்பாசணை? இதை மின்சாரம் பாய்வதைப் பற்றியும், இரசாயனப் பொருத்தம் பற்றியும், பட்டாம்பூச்சி பறப்பதாயும் நம்புபவர்களிடமா சொல்ல முடியும்? ’&lt;em&gt;மீடியா&lt;/em&gt;’ ட சாயலற்ற உறவு ஒரு பெரிய மித்(Myth). மாயைகளை நான் நம்புவதில்லை.&lt;br /&gt;ஒருபோது, இவங்களுக்குள், மடத்தனமா, நான் நினைச்சன், ஒரு மூடப்பட்ட &lt;em&gt;அப்பாட்மென்ற்&lt;/em&gt; உக்குள்ள ஒரு முற்போக்கான ஆணோட வாழ்ந்திரலாம் சுலபமா இந்த வாழ்க்கையை எண்டு. எனக்கு வாழ்றது ரொம்ப சுலபமா இருந்தது. மரம், கல், நிறம் போல மாறிக்கொண்டே இருக்கிற சுலபமா. அவனுக்கு வாழ்க்க சுலபமா மட்டும்தான் இருக்கேல்ல. என்ர பலவீனமான உடம்பில அவன் செய்யிற பயிற்சிகளும், கடமைகளும்... வாழ்கையை உண்மையா வாழோணுமெண்டு நினைக்கிற பெண்ணுக்கும், அத மட்டும்தான் செய்யக் கூடாதெண்டு நினைக்கிற ஆணுக்கும் எப்பிடிப் பொருந்தும்? என்னப்போல இல்லாம, கிடைக்கிற உடம்போட படுத்து எழும்பின அவனுக்கு, என்னோட நினைவுகள், நட்புகள், தடயங்கள் எதையுமே ஏற்க முடியேல்ல, ஒரு இணையா, சக ஜீவியா. இதுக்குள்ள ரொம்பவும் சிலேடையா ஜனநாயகம் பேசின அவனுக்காக, நான் ஒவ்வொருத்தனோட நினைவையும் என்ர ஆன்மாவோட அனுமதியின்றி அழிச்சது ஒரு சந்தேகக் கணவனுக்கு பயப்பர்ற மனைவியிலும் கேவலமா இருந்தது. எண்டாலும், ரொம்பவும் உயர்ந்த அர்த்தத்தில சடங்குகள நிராகரிச்சிருந்தம். மனசு எண்டிறது அதிகாரமா வெறிச்சிருக்க என்னத்த நிராகரிச்சு என்ன. அடிமைத்தனம், அது எங்கட உடம்போட இருக்கு.&lt;br /&gt;முதலாமுலக நகரமொண்டில, அவனிலும் வேகமா நடக்க முயன்று, புத்தகங்களை மனப் பாடம் பண்ணாச் சின்னப் பெண்ணாய் பட்டதை சொல்லியபடி, நான் போனது என்ன கிளப்புது. ஒரு ஆணுக்காக, சமயத்தில எங்களுக்கெண்டு இருக்கிற இலட்சியம், கனவு, அரசியல், தேடல் எல்லாத்தையும் விட்டு, அவன பராமரிக்கிற தாதியா ஆகோணுமெண்டிற உருவாக்கம், அது எப்பிடி நிகழுது?&lt;br /&gt;சதா பிரமிப்பூட்டுற கண்கள் பொல்லாதது. இரவுகளானா அவனோட பரிசோதனை உடம்பு என்னை விரும்பின மாதிரி நிக்கச் சொல்லும். மறுக்கமுடியாதபடி, எனது விடுதலை உணர்ச்சிகள் சீண்டப்படும். &lt;span style="font-size:130%;"&gt;’நீ முற்போக்கானவள் அல்லவா!?&lt;/span&gt;’&lt;br /&gt;மிகவும் மெல்லிய மாலைகளா அவை இருக்கும்.  எளிதில் உடைந்துபோகிற, ஆதரவு தேடிய பெண், அப்ப நானா இருந்தன்.  என்னோட நினைவை காமத்தை, காலத்தைத் தூண்டிற மாலைகள். நான் 'பலரோட ரச் விட்டுப்போய் பல வருஷம். திரும்ப புதுப்பிக்கோணும் எண்டும் ஏனோ தோணேல்ல. அப்பிடியே போச்சு' என்னை மறந்து பகிரவும், அவனின் வாய் ஒரு மாதிரி வளைந்தது. பல அர்த்தங்கள்... எங்கேனும் இரட்டையாய் கொச்சை தெரிகிறதா என அர்த்தப்படுத்தும் ஒரு சூழ்நிலையில். அருவருப்பும் கீழிறைத்தலும் தொடர நடுவிரலைக் காட்டி, பிறகு அத வாயுக்குள் வைத்து சூப்பின அத்தனை குரல்களும் துரத்தின.&lt;br /&gt;நட்சத்திரங்கள் மினுக்கிற பின் கோடியில், மயக்கும் என்னை மேயிற பாடல்கள் உடன் - உட்கார்ந்திருப்பேன். -அவனைப்போல- ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களை சந்தித்து விட்டேன். எல்லாம் மின்னுகின்றன- உடம்பின் சிலநேர இணைவிற்காய் மாத்திரம்.&lt;br /&gt;பெண்ண உச்சத்துக்கு இட்டுச் செல்றது மட்டும்தான் மிகப் புரட்சியான விடயமென நினைக்கிற கணவன்களில் ஒருவனாத்தான் அவனும் இருந்தான். இப்போ, எல்லாராலும் நினைச்சும், ஏற்றும் கொள்றமாதிரி, அவனுக்கு ஒழுங்கா சமைச்சு படுக்கையையும் போடுற ஊரில் தருவிக்கப்பட்ட ஒரு பெண், கன்னி, ’அவருக்கு நிறைய விசயம் தெரியும் ’ என்கிற அவளோட பெருமையோட வாழ்வாள்.&lt;br /&gt;மனைவியிடமிருந்து, அவனது உடற் பரிசோதனைகள் பற்றியோ, பிற உறவுகள் தொடர்பான கேள்விகளோ கேட்கப்படாது, அவன் ஆம்பிளையா ஆசிர்வதிக்கப் பட்டிருக்கிறான்.&lt;br /&gt;&lt;strong&gt;(மௌனம்...)&lt;/strong&gt;&lt;br /&gt;’’என்னோட காமத்தைப் போல, ரம்மியமா அலையுது கடல். எனக்குப் பிடிச்சமான நடிகையோட இயற்கையான வறண்ட கன்னத்திட சிரிப்பின் மொழுமொழுப்புப்போல. அதிட வசீகரத்தில நான் கண்டுண்டு கிடக்கிறன். என்ர நிர்வாண உடம்பில அலையிட தொடுகை என்னோட காமத்த அமத்தாம ஒரு இயல்பா ஏறுது. திடீரென அது பற்றி எரிய ஆரம்பிக்குது. கடல், ஆண்களும் பெண்களும் நிறைஞ்ச கூடம். நான் அந்த எரிவ உணர்றன், கூட்டத்தில் ஒவ்வொரு பெண்ணும் உணர்கிறார்கள். ஆனா ஒரு சின்ன சூட்டிலயே ஆண்கள்தான் கதறுகிறார்கள். மௌனமா இருக்கிற பெண்கள ஆச்சரியத்தோட பாத்து, அவர்கள் ’என்ன சுடேல்லையா’ எனக் கேட்கத்தான், பெண்கள் கிளர்றாங்க "ஓ சுடுகுததான்.’’&lt;br /&gt;என்னை எனக்காக கதற சொல்ற நிலையில அவன்தான் இருக்கிறான். எனது எந்த துயரிலும் அவனோட நலன அவன் மறக்கிறதில்ல.&lt;br /&gt;நான் ஒரு radical feminist. ஆக மிஞ்சினா இப்பிடித்தானே சொல்லுவாங்கள்.&lt;br /&gt;ஆண்களுக்கு தஸ்லிமா நஸ்ருதின் அதிர்ச்சிதான். ஒரு பெண்ணால இப்பிடி இப்பிடி பேசிறதையே தாங்கிக் கொள்ளாதவங்களுக்கு தலையில கொண்டந்து கடற்பாறையைப் போடுற அது எப்பிடி இருக்கும்! அவங்கள் அவவ எதிர்த்தா எங்க தாங்க anti ஆயிருவோமோ எண்டு பயந்து, அத மறைச்சாலும் அவங்கட உதட்டிலும் கண்ணிலும் இருந்து தெறிக்கிற யுகயுகமான அதிர்ச்சிய நான் குரூரமா இரசிச்சிருக்கிறன். விந்துகள மட்டும் தெறிக்கப் பழகிய இவங்கள அவளோட எழுத்து அச்சுறுத்துது எண்டிறதும், அவளப்போல பெண்கள இவங்கள் பயமா பாக்கிறாங்கள் எண்டிறதும் மனோரீதியான ஒரு ‘என்னால முடியாதத’ என்ற தன்மைய, குதூகலத்த(ப்) பெண்களுக்குத் தருது. அதனாலதான் அவள் பேசிறதோட முரண்பாடான பெண்களே, அவளோட ஆண்கள் தொடர்பான எழுத்தப் படிக்கேக்க கொடுப்புக்கு வெளியால சிரிக்கிறாங்க. ஆண் வெறுப்பு கடையள் தெருக்கள் புத்தகங்கள் பஸ்கள் நாயின் நாக்குத் தெரியிற கண்கள் என இதில எங்கையோ அவங்கட மூளையில பதிஞ்சிருக்கு.&lt;br /&gt;இவங்களால திரும்பத் திரும்ப உருவாக்க முடிஞ்சதெல்லாம் அவளப் போன்ற பெண்களைத்தான்.&lt;br /&gt;இவர்களால் புத்தகங்களை அடுக்கி, இந்தப் பக்கத்தில் இன்ன இடத்தில் என ஆரம்பங்களில் நிற்கிற உன்னிடம், பிரமிக்கிற மாதிரி பேச முடியும். முக்கியமாக, என் வாயை அடைப்பதில் இவர்கள் ஆற்றிய பங்கின் தந்திரங்களும், வியூகங்களும்... ஒரே அடியில் நான் என் வாயை மூடும் அந்த காலத்தில், பொருளாதார சுதந்திரத்தாலும்(!), அவர்களுக்கென்று ஓர் நாடு இருப்பதாலும், என்ர மனசில ஐரோப்பா அமெரிக்காவில எல்லாம் பெண்கள் பறக்காத குறை! வக்கிரங்கள ஒழுக்கமீறல் என்று ’நியாயப்படுத்திற’ மிக மோசமான செயலை இவங்களிட்டத்தான் கண்டன். பிறகெல்லாம் இவர்கள் பாமரர்களைப் போல அல்லாம ’உயர்ந்த அர்த்தத்தில’ ’கற்ப’ப் பற்றிக் கதைச்சா அது உங்கட தேசியம்போலதான்டா எண்டு சொல்லுவன். உடன, &lt;em&gt;(அலட்சியமாக)&lt;/em&gt; உப்புச் சப்பற்ற அந்தக் கோபம் வந்திரும்.&lt;br /&gt;கலாச்சாரம், கட்டுப்பாடு, குடும்பம் போன்ற பின்தொடர்தல்களை சின்னச் சின்ன விதிகளோட (தமக்குத் தகுந்த) விரோதிச்ச அவர்களுக்கு திருமணத்தில ஈடுபாடு இருக்கேல்ல. அதன்மூலம் கொஞ்சக் கால &lt;em&gt;றொமான்ரிஸ&lt;/em&gt;த்த தேர்ந்தெடுத்தாங்க.  திருமணம் என்பதற்கு அவங்கட மாற்றீடு தன்வயப்பட்ட வாழ்க்கைதான்.  அதிலும் பெண்கள் கருவிகள்தான்.  திருமணத்தப் போல அதுவும் என்ன இப்பிறஸ் பண்ணேல்ல.&lt;br /&gt;வெளியில வருற பெண்களுக்கு இவர்கள் காட்டிற வழியெல்லாம் பொங்கி எழு புறப்படு வகைதான்.  எண்ணெய் ஊற்றி ஊற்றி உன்ன ஏற்றி விட்டு, ’எழு! ’ என்பார்கள்.  நீ எரிஞ்சு சாம்பலாக மட்டும் ஊற்றி ஆரவாரிப்பார்கள், பேசிறது தம் பெண்ணில்லையே!  மனைவியோ, காதலியோ, தமக்கென்று வரும்போது எல்லா சாமுத்திரிகாலட்சணங்களோடும் பெண் வேண்டும் இவர்கள் உனக்காக கூட்டம் போட்டு, 'முற்போக்கு' முத்திரையோடு பேசுவார்கள். எல்லாக் கூட்டத்திலும் வெள்ளை ஆடை போட்ட 'ரிப்ரொப்'பான ஒரு நிதானமான ஆணை நீ எதிர்கொண்டு சலிப்படையாம, பொறுமையாப் பதில் சொல்ல வேணும். அவன், நிதானமா, கன்னத்தில கையை வைச்சு, எல்லாத்தையும் கேட்டிட்டு, 'ஒவ்வொரு காலத்திலையும், கொஞ்சப் பேர் இப்பிடி ஆண்கள (எரிச்சல் எழும்பி அதை மறைக்கப் பிரயத்தனப்பட்டபடி) வெறுக்க எண்டே வெளிக்கிட்டிருக்கிறிங்க' நறுமும் பற்களை, நல்ல வார்த்தைகள் சொல்வதில் இருந்து மறைத்து, கைகளை காட்டிப் பேசுவான்.  நீ பொறுத்து, உன்னை அடக்கி, எது எது கூடாதென கிளர்ந்தாயோ அதையே, தொடர்.&lt;br /&gt;&lt;em&gt;(கழுத்தையும் மனசையும் கீறும் மௌனம்)&lt;/em&gt;&lt;br /&gt;மனிதர்கள் என்னைக் கிழிச்சிருக்கிறார்கள். “நான் கல்யாணம் எண்டோண்ணையே முடிவு செய்திற்றன். மனுசி இதுகள் சுத்தமா தெரியாத ஆளா இருந்தாத்தான் நல்லம், வசதி எண்டு.  பிறகு இரண்டு பேரும் இலக்கியம், எழுத்து, கவிதை எண்டு வெளிக்கிட்டாக் குடும்பத்த யார் பாக்கிறதாம்.” ‘எங்கட தங்கைச்சியாக்கள் உங்கள மாதிரி இல்ல.z'' ‘‘உங்கட ‘வித்தியாசம்தானே'‘‘ ‘‘அவன நினைப்பியோ?‘‘ ‘'இங்கயும் தொட்டவனோ‘' ‘'இதுக்காகக் தானே'‘ உதட்டைக் கடிச்செண்டு அழுகைய விழுங்கிக் கொண்டு விறைக்கிற வீதிகளூடா நடப்பன்.  உடம்பைத் துளைத்து, அதுமூலமா மாத்திரமே பாத்துப் பழகிய மனிதர்கள்...  இவர்களால் ஏற்படுத்தப்பட்ட சேதங்கள் அழியாது, நீலத் திரைச் சீலை அசைய நான் படுத்திருக்கிறேன். எதிர்ப்புறத்தில்: -சமூகத்தின் உடைந்த இவர்கள்- மலர்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.  அவற்றின் மேன்மை பற்றி.  மகரந்த கிளர்த்தல்கள் குறித்து.  ஆளன் எப்போதும் ஆணாக இருப்பதால் அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே அவை உதிர்ந்து, காய்ந்து, இல்லாமலே போய்விட்டன.&lt;br /&gt;எனக்குள்ள எழுந்த ஒரு அழகான கவிதையைக் கிழிச்சுப் போட்டவர்களுக்குள்ளால -அதப் பாதுகாக்கோணும், பறிச்சிருவாங்கள் என்ற பயங்களுக்கூடா- என்ர விடுதலையை என்னால உணர முடியேல்ல.&lt;br /&gt;நான்: என்ர நம்பிக்கைகளோட, அதுகள பாதுகாக்கிறதுக்காக, வேறோர் உலகத்தை உருவாக்கி அதில வாழ்ந்து கொண்டிருந்ததா உணர்ந்தன். இவங்களுக்குள்ள விழுந்து கொண்டிருக்கிற அதேநேரம் எழுறதும் நிகழ்ந்ததா ஒரு பிரம்ம.&lt;br /&gt;கஸல் பாடகர்கள் உருகும், அதிகாரங்களால் சூழப்பட்டிருந்த காதலிகள்- ஹிந்துஸ்தானிபோல, குழந்தையின் குளுகுளு கன்னங்கள் இன் களங்கமற்ற விரிவு போல உருக்குவார்கள்.  ஆனால் அஃதால் எதையுமே பெறாத ஒரு ஏழைக் குழந்தை, தாயின் சூம்பின முலையை நம்பிக்கையோட திரும்பத் திரும்பச் சூப்பிறது போலான இழப்பும் நம்பிக்கையும்தான் எனது குரலாக இருந்தது.  எனது பிடிவாதமான மயக்கங்கள் நிரம்பிய உலகத்தில், நானே சுத்திகரித்து உருவாக்கிக் கொண்ட அந்தக் குரலில் ஒரு ஆணைக் கிறக்கும் தந்திரமோ, சூழ்ச்சிகளோ, ஆழ்க் கவிழ்ப்பு நாடகங்களோ இல்லை என்பதை மறந்திருந்தேன்.&lt;br /&gt;சுவர்களில் மொழி நிர்க்கதியில் மோதும். இறுதியாய் விழுகிற மௌனம், என்(i)ன நினைக்கத் தூண்டும்.&lt;br /&gt;.........&lt;br /&gt;அவன் என்னை விட்டுப் பிரிந்த போது, நீலமும் பச்சையும் கரைகிற திரைச் சீலை ஊதா தருகிற கருணையில் உதட்டைக் கடித்துக் குவித்து, மொழியைக் கொன்றேன்.  அவன் என்பது: என்னைக் கசியப் பண்ணும் அந்தச் சிரிப்பு. சில வரிகள் நினைவுறுத்தும் கிளர்வு. எல்லாவற்றிலும்விட, அவன், மொழியின் காதலன். நான், கூரிய ஆயுதத்தால் என்னை அடக்கி, அவனை நினைவுறுத்தும் பேச்சுக்கான வாய்ப்புகளை அறைந்து சாத்தினேன்.&lt;br /&gt;மொழி: வாதம் செய்வது, மொழி உணர்வை அழிப்பது. நாகரிகமெண்டு பூட்டி வைச்சிருந்த மொழி, உடம்பை மட்டுமல்ல, வாயையும் அஃதாலேயே போர்த்தி, மாதவிலக்கை எழுதும்போதுகூட, மிக நுட்பமாக, கத்தியில் இருந்து எழுதும் கனம்.  நாகரீக மொழி மறைத்த வலிகள், மேலெழுதல்கள், தழுவல்கள்...  எனக்கு கட்ட உடைச்சு எழும்பேக்க எந்த தடையும் பிடிக்காது.  விட்டு வீதியா, உச்சத்துக்கு செல்ல எவன்ர தலையீடும், எவன்ர இடையூறும் இன்றி இயங்க விரும்புவன்.  ‘எல்லாத்திலும் அப்பிடித்தானா‘ எண்டு வக்கிரம் கேட்கும்.&lt;br /&gt;கண்காணிப்பை எண்டைக்குமே தாங்கிக் கொள்ளேலாத என்(i)ன, அம் மனுஷர் கேட்டார், ‘நீங்களோ அது? நீங்க எவ்வளவு நல்ல பிள்ளை (ரொம்ப சந்தோசம்).‘ இன்னும் அவரிட்ட இருந்த திகைப்பு மறையவில்லை. ‘...உண்மையாவே செக்ஸ் ஸ பற்றி அவ்வளவு அசிங்கமா எழுதினதும் நீங்களே... என்னால நம்பவே முடியேல்ல.‘ செக்ஸ் அசிங்கமானது என கட்டமைத்திருக்கும் ஒரு சமுதாயத் திருவாயிடமிருந்து எதை எதிர்பார்க்க முடியும். அதிலும் பெண்களது காமத்தைப் பிரித்து எவ்வாறு வாதிட முடியும்?&lt;br /&gt;நான் கேட்டன், ‘ஏன் நீங்க சொல்ற நல்ல பிள்ளையள் அந்த மாதிரி அசிங்கங்கள்ல ஈடுபடுறதில்லையோ‘. அவர், கூடாத ஆள் இல்லைத்தான். ஒரு அன்போட, அக்கறையோட கூட கதைச்சிருக்கலாம் -அதற்கு நன்றி- என்னோட இயல்புக்கும் எழுத்துக்குமான இணைப்பை போட முடியாத குழப்பத்திலயும் பேசி இருக்கலாம் ஆனா எனக்கு அந்தத் தொனி பிடிக்கேல்ல.  எவனுக்கு தெரியும் பெண்ணோட காமத்தைப் பற்றி?  நான் அவரோட பார்வையில ‘நல்ல பிள்ளை‘ எண்டு இருக்கோணுமெண்டிறதுக்காக பூசி மெழுகிற ஒரு பதில ‘கற்பனைதானே‘ எண்டோ என்னவோ சொல்லோணுமா.  சும்மா போ.  என்ர பேருக்குப் பின்னால புனையிற இன்னொரு பேர் எனக்கு தேவையில்ல.  அத தவிர்க்கிறதுக்காக பதிலாய் இன்னொரு கதை புனைய நான் தயார் இல்ல. அதக் கேட்டுட்டு ‘ம் அப்பிடி சொல்லேலாது‘ என புளிச்சுப்போன முறையில, கண்ட கசவாயும் தூக்கிக் கொண்டு திரியிற முடிவுகளுக்கு என்னட்ட விளக்கம் கேட்க கோபமா வருது.  தாங்களா கேள்வி கேட்டு அதுக்கு தாம் எதிர்பாக்கிற பதில நான் சொல்ல எதிர்பாக்கிற அவங்களுக்குத்தான் வித்துவ நோய், எனக்கென்ன?&lt;br /&gt;பத்திரிகையோ, பஸ் இருக்கைகளோ எனக்கு சலுகைகள் வேண்டாம் என்றேன். ‘நீ ஒரு பெண்ணிலைவாதி.‘ தொடர்ந்து, காற்றில் இருக்கிற அதிகார மொழியைப் பேசினேன்: ‘நீங்கள் பெண்ணிலைவாதிகள் சொல்லுவிங்கள்.‘ மூன்றாம் தொனிப்பின் இடையூறில், ‘இவர்களின்‘ அகராதி தெரியாமல் குழம்பி ‘நான் ஒரு பெண்ணிலைவாதி அல்ல‘ என்கிறபோது, தயாராய் வைத்திருந்தார்கள் உலுக்கிற ஆயுதமாய் அந்தக் கேள்வியை: ‘ஏன் பயப்படுகிறாய்?‘&lt;br /&gt;பெண்ணியம் வரைமுறைகளுக்குள் அடங்கவில்லை. பெண் சிந்தனையில்- அடியில் -அடிப்படை அறிவில்- இருக்கும் மனிதன் முதல், வித்தியாசமானவன் எனப் பிரிந்து நிற்கிறவன்கூட பெண்நிலைவாதம் பேசுபவளை கேட்டுப் பாக்கலாம் லிஸ்ற் ரில் வைத்திருந்தால், அத மறுப்பதும் ஒவ்வொருத்தியோடையும் தேர்வுதான்.  ஏதோ ஒரு வகையில் அவர்கள், என் எல்லா முடிவுகளையும் தமக்குச் சாதகமாக்குவார்கள். இங்கே எனது விடுதலை உடம்பை நாலு பேருக்கு போட்டு விடுவதில் முடிவடைந்து விடுகிறது.&lt;br /&gt;எனக்கோ என் உடம்பு நிறைய காதலுடன், உலகத்தின் ஒவ்வொரு மாற்றத்தையும் அரசியலையும் விவாதித்து வாழும், எளிமையோடு வேண்டும். அது எவரோடோ அல்லது தனித்தோ ஆனால் வாழ்தல் என்பது நேர்மையாக.&lt;br /&gt;‘‘நீ, என் மார்புக் கச்சையை மெல்ல விலக்கி சுகம் காணுவதாய் கவிதை எழுது, ‘பிரா கூக்கை கழட்டி...‘ விபரமாய் கதையும் எழுது.  ஆனால் அதுள் நான் சுதந்திரம் பேசினால் ‘இதுதானே வேண்டும்‘ என வக்கிரம் கொள், பாய்.‘‘&lt;br /&gt;என்னைப்போல பெண்களின் எதிர்காலம், மரண அதிர்வுகள் நிறைந்த இறந்த காலத்த விட மோசமா இருந்தது.  என்னாலும் முடியேல்ல.  கடைசியா என்ர கவிதைகளில் -என்னை விட- நேசங்கொண்ட தோழி பிரசுரிக்கக் கேட்க, பொறுமை இழந்து, 'என் கனவுகளைப்போல கவிதைகளையும் இழப்பதற்கில்லை' என்றேன்.  அவ்ஒரு பெண்ணின் விழிகட்குள் எழுந்த வலியின் வார்த்தைகளை எழுதுவதற்கும் அவங்களில் யாரும்தான் பிறக்க வேண்டுமோ என்னவோ!  எங்களது கூடத்தில் அவளும் நானும்தான் மிஞ்சியிருந்தோம்.&lt;br /&gt;நன்றாக சிகரட் புகைப்பாள்.  தொண்டை, சுவாசம், நுரையீரல், புற்று நோய் என அடுக்கினால், அதை எதிர்த்து அவள் வாதம் செய்வதில்லை.  ‘பணத்துள் அழிந்த குழந்தைப் பிராயத்தின் எச்சம். விடுதலையின் சின்னமா என அறுக்காத‘ என்று, உலகத்தால் தரப்பட்ட வேதனைகளை எல்லாம், புகைத்து ஊதிய அந்தக் குழந்தை, பின்தங்கிய கிராமம் ஒன்றில் போய் இறங்கியபோது, அவர்களில் ஒருத்தியாகி, ஒருநாளைக்கும் ஒன்றென்று கூட இருக்க முடியாதவள், அவ் மூன்று கிழமைகளையும் எவ்வளவு இலகுவாய் நெட்டித் தள்ளினாள்.&lt;br /&gt;கிடைக்காத காதலையும், ஆதரவையும் மனிதர்களில் தேடிய அவள், பேசுகின்ற மொழி: தனிமை.  நீளும் மௌனங்களைக் கிழித்து, அவளோடுதான், உடல் சார்ந்த கேள்விகளையும், கட்டற்ற காதலையும், பாலியல் சுதந்திரத்தையும் அஃதால் பெண்களுக்கு இருக்கக் கூடிய நலன்கள் பற்றியும் -For heavens sake அப்படி ஏதும் இருப்பின்- சுதந்திரமாய், உண்மையாய், விவாதிக்க முடியும்.&lt;br /&gt;அன்றும், பலவாறு பேசிக் கொண்டிருந்தவள் குரல், திடீரென உடைந்து காற்றில் செருகிற்று.  ''ஜனா! நான் நிறையத் தப்புப் பண்ணியிருக்கிறன் ஆனா நான் செய்தது என்றுறதுக்காகவே அவற்றை அவர்கள் மறக்காமலிருப்பது, அது என்ன நியாயம்.''&lt;br /&gt;நம்பிக்கைகளை இழந்திருந்தாள்.&lt;br /&gt;என்னவென்று சொல்ல முடியாத பொழுதில், என்னுடைய அவள், மரணங்கள் கிழிக்கிற குற்ற உணர்வுகளோடு சுய கொலை செய்து கொண்டாள். அவளோடு சம்மந்தப்பட்ட ஆண்களையும் சேர்த்த சமூகம் அங்கீகரிக்காத உறவுகள் நிறைந்த அவளது வாழ்க்கை காலத்தில், எத்தனை நாழிகை வாழ்ந்திருப்பாள் என்பதை எனக்குச் சொல்லத் தெரியவில்லை.  எதிர்ப்பட்ட ஒவ்வொரு மனிதப் பிரகிருதியிடமும், அவள், தன் காதலை, உயர் நேசத்தை தந்துவிட விரும்பினாள்.  மலையைத் தூக்கக் கூடிய பலமும், அண்டத்தை அதிர வைக்கக் கூடிய வீரியமும் அவளிடம் இருந்தன.  அவளை பால் இயலின் தம் இன்னொரு தேர்வாய், இவர்கள்தான் மாற்றினார்கள்.  பெரும் பாரத்துடன் எழுந்த அவ் மூச்சு, அடங்க மறுத்து என் மார்புள் எறிந்தது. வெகுகாலம் மிகச் சமீபமான சுவாசமாய். அவளை நான் முத்தமிட்டிருக்க அல்லது இரவில் தொடுவதற்குரிய தூரத்தில், கைகள் தருகிற சுமையிறைப்பில் -அதிகம் அர்த்தம் தருகிற இராக் கால பகிர்வில், அவளது சுவாசம் தருகிற பிணைப்புடன்- அவள் பிரசன்னித்திருக்க வேண்டும்.&lt;br /&gt;என்னோடு பேசிய, வாழ்ந்த, கிளர்ந்த அந்தப் பெண்களை இவர்கள்தான் அடக்கினார்கள், பகிரங்கமாய்க் கொன்றார்கள், எல்லாவற்றிலும் அதுதான் எனக்கு மிகக் குரூரமாய் இருந்தது&lt;br /&gt;இந்தக் காலத்தில என்னோட கலந்து கொண்ட அவன்கள் ஞாபகம் வருகிறார்கள்.  அவன்களில் எவனும் என்னை கீழிறைத்து, என் நம்பிக்கைளைப் பறிக்கவில்லை.  நான் படுக்கையில எப்பிடி இருப்பேன் எனக் கற்பனை செய்து, அதை யுகயுகமான அகங்காரத்தின் தினாவெட்டுடன் எழுத்தேற்றவில்லை.  நெல்லி மரத்தருகுக் கிணற்றடியில் நான் தண்ணி அள்ளிக்கொண்டிருக்கும்போது அவன்கள் பிராய்ட் பற்றி நூலகத்தில் படித்ததை கிசுகிசுப்பாய் ஒரு மெதுவான குருவியின் குரலில் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.&lt;br /&gt;&lt;em&gt;...(ஏக்கம்)..&lt;/em&gt;&lt;br /&gt;அது இறுதிக் கனவா இருந்தது. பிறகு, குழுக்களின் மீதான நம்பிக்கையும், மாயையும் அழிய, ஆணோ பெண்ணோ, தாம் பேசப் படவேண்டும் என்பதற்காக ஒவ்வொன்றையும் காவி, எல்லாவற்றையும் ‘கடைப்பிடித்து‘ நாசமாக்கினார்கள்.  எங்கட குழுவில ஒருத்தி, திருமணம் செய்தாள், தாலி, ஐயர் இத்யாதி இத்யாதி சம்பிரதாயங்கள் இல்லாம!  எனக்கும் தோழிக்கும் குழுவில மிச்சமிருந்த நம்பிக்கைகளும் போயின.  ஜோடிகளுக்கு விருந்து நடந்தது. விசாலமான வீட்டு தோட்டத்தில, செயற்கையான நிறநிற மின் குமிழ் மினுப்பூடா அவளோட கழுத்து ஜொலிக்குது.  தாலிக்கு பதிலா ஒன்று, கழுத்தோட ஒட்டி, நெக்லஸ் வடிவில் ஆனால்ல் அதில் இரண்டு நாணயங்களும் நடு அங்கமும், தடைகளும் அச்சாக! அவள் சொன்னாள்: ‘சாறிக்கு தாலி வடிவு. ‘புது டிசைன், எப்பிடி 'புதுமை‘யா இருக்கில்ல!?‘‘ எனக்குத் தெரிந்து சினிமாவை விட வேறெதிலும் தாலி வடிவாய் இருந்து நினைவில்லை. சினிமா தருகிற பிம்பத்தையே தவிர்க்க முடியாதவள், வழுக்கி விழுகிற படிக்கட்டு வீட்டில், தொலைபேசியில் பேசிய வீறாப்புகளை ஒரு குழந்தையின் கள்ளத்தனமாய் மன்னித்துவிட நான் தயாராய் இல்லை.&lt;br /&gt;என் உள்ளிருந்து, அவர்களுக்குள் -ஒரு பொது உடன்பாட்டுடன்- கலந்து கொள்ளாத, ஏதாவது ஒரு திருப்தியுடன் வாதம் செய்ய முடியா, எதுக்குள்ளும் கட்டுப்படா, எளிதில திருப்தியடையாத அந்தப் பெண், என் எதிரியாய்த் தான் இருந்தாள்.  அதுவரை வாள/ழாதிருந்த நான், தன்வயப்பட்ட வாழ்க்கையை, நியாயப்படுத்தும் அவர்கள் அரசியலை சகிக்கவேண்டிய கடப்பாடு நேர்ந்தபோது எவ்வித ‘தூய படைப்பியல்‘ &lt;em&gt;சென்ரிமென்ற்&lt;/em&gt; றும் இன்றி வெளியேறினேன்:&lt;br /&gt;‘‘ஓம். நான் பெண்ணிலைவாதிதான். மூச்சிலும் பேச்சிலும் பெண்ணைப் பற்றி சிந்திக்கிற அதேநேரம் உலகத்தில் பிரக்ஞையும் உடையவள் ஆனா எந்தக் காலத்தி(i)லயும், நான், நீ நினைக்கிற பெண்ணியவாதி இல்லை.‘‘&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சென்னை: இறுதி நாள்:&lt;/strong&gt;&lt;br /&gt;இந்தக் கரை மண் ஓயாது போர் செய்கிறது, நீரின் அரிப்புக்கு எதிராய். சன்டில்ஸ் ஐ கழட்டி எறிந்துவிட்டு, மார்பு உருக உருக, மெல்லிய பாதங்கள் புதையப் புதைய நடக்கையில், பேச்சில் எந்தக் கவனமும் இல்லை. அவன் கூட வந்தான். அவனது பேரறிவில் நான் சிற்றலை! எனினும் அவனை பார்த்து கடலைப் போல பிரமிப்புற்றதில்லை.&lt;br /&gt;எத்தனை நதிகள் நாம் அறியாமலே கலக்கின்றன.  சோகியும் சிப்பியும் பொறுக்கி பத்திரப் படுத்திக் கொண்டேன்.  வண்ண வண்ணமான நிறங்களில் காப்புகளும் தோடுகளுமாய் கரைந்திருந்த, ஏழை தொழிலாளிகளிடம், காப்புகளை வாங்கி, ஆசையுடன் கை நிறையப் போட்டுக் கொண்டேன். 'நீங்கள் ஆண்கள்' என கைகாட்டிப் பேசும் என்னை அவன் ஆச்சரியத்துடன் பார்த்திருந்தான்.  புரிந்துதான் இருந்தேன்.  எனக்குள் இருக்கும் சிறுமி, தன் திருவிழாக் காலங்களில் அந்தக் கணம் வாழ்ந்தபடி இருப்பாள்.  காடுகளுக்கு ஊடாகப் போகிற ஆற்றில், கால்களை நனைத்தபடி உலகத்தை வாங்கிய என் உட் சின்னப் பெண்.&lt;br /&gt;கடற்காற்று மூக்கை முகத்தை தீண்டி தலைமயிரைக் கலைத்துப் போகும். கணவனை இழந்த பெண்ணிடம் மல்லிகை சரம்சரமாய் வாங்கி வைத்துக் கொண்டு மோகம் கொண்டது மனசு.  சுவாசம் என் உடம்பை முழுவதுமாய் வருடிற்று.  இந் நூற்சேலை என்னை இவனுக்கு இன்னொரு பெண்ணாய் மாத்திரம் காட்டும்.  எனக்கோ இவனை இவன் ஒருவனாய் மட்டும்.&lt;br /&gt;அப்பால் சிறு தள்ளி, கடலுக்கு அங்கால், எனது சுதந்திரத்தை மறைத்து, கழிவுகளும் குப்பைகளும் மனித மலங்களும் மனிதர்களும் வறுமையும்... எப்படிப்பட்ட நகரம் இது.  என்ன கட்டமைப்பு. அருகிருக்கும் கோயிலுக்கு காரில் வரும் எழுத்தாளர்கள், நடிகர்கள்!  கடலை விற்கும் சிறுவனின் கிழிந்த ஊத்தைக் கழிசான்களளூடாய்த் தூய்மை. அவனை நான் நெடுநேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். அச் சிறுவனைத் தவிர, ஆண்கள் என்னை மலைக்கவில்லை.&lt;br /&gt;என்னிடமிருந்த பயம் போயிருந்தது. பல்கலைக்கழக பிள்ளைகளின் கலகலப்பு என்னை ஆசுவாசமாய்ப் போர்த்திற்று.&lt;br /&gt;ஒரு மத்தியானம் வடியும் மாலை.  எனது விடுதலையும் தோல்வியும் துர்நாற்றம் வரும் பக்கங்களிலிருந்தும் கடலின் வாளிப்பிலிருந்தும் ஒலித்துக் கொண்டிருந்தது.  நான் அதைக் கேட்டேன்; என் காதின், கரங்களின், கண்களின், உடம்பின், ஆன்மாவின், தேடல் அழியும் வரைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;a href="http://pirathi.blogspot.com/2004/12/english-newspaper-article-translated.html"&gt;--&gt;ஜனனியின் ஓவியக் கண்காட்சி பற்றிய ஆங்கிலக் கட்டுரை (தமிழில்)&lt;/a&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9397992-110187998992773693?l=pirathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pirathi.blogspot.com/feeds/110187998992773693/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9397992&amp;postID=110187998992773693' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9397992/posts/default/110187998992773693'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9397992/posts/default/110187998992773693'/><link rel='alternate' type='text/html' href='http://pirathi.blogspot.com/2004/12/blog-post_110187998992773693.html' title='உள்'/><author><name>புதிய கனா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='20' height='32' src='http://www.imagesofceylon.com/people/p19-full.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9397992.post-110188002592804789</id><published>2004-12-28T21:32:00.000-08:00</published><updated>2005-05-22T23:28:05.410-07:00</updated><title type='text'>English Newspaper article Translated</title><content type='html'>பத்து வருடங்களுக்கு முன் உடனடியாக பெரும் கவனத்தைத் பெறாத (இடையில் நிகழ்ந்த ‘பறவைகளின் பெயரை அறிந்து கொள்ளல்‘ தவிர்த்து) ‘என் வேர்கள்: அரசியல்: நான்‘ இற்குப் பிறகான நீண்ட இடைவேளை கடந்து, ஜனனியின் ‘அழிக்கப்பட்ட பிரதேசங்களும் நானும்‘ ஓவியக் கண்காட்சி கடந்த மாதத்தின் இறுதிக் கிழமைகளில் --- ஹோலில் மாலை நான்கு மணி முதல் இடம்பெற்றது.&lt;br /&gt;அந் நெடும் உருவத்தில் அதே அலட்சியம், சிநேகம்.&lt;br /&gt;சகல அமைப்புகளோடும் உறவை முறித்துக்கொண்ட இவர், அரசு நிறுவனங்கள் சாரா ‘சிறுவர் ‘ ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவர். தான் வாழ்ந்த காலத்தின், தனது புரிதலும் வசதியும் சூழலும், இலங்கையின் நவீன ஒவிய வளர்ச்சியோடுகூடத் தொடர்பு வைத்திருக்கவில்லை என்கிறார். பூர்வீகக் குடிகளின் கலை கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டிருப்பதாகவும், முகத்தின் சுருக்கங்களுடன் தனது கலாச்சாரத்தை உட்தாங்கிப் படைக்கிற &lt;a href="http://www.collectionscanada.ca/women/002026-518-e.html"&gt;Daphne Odjig&lt;/a&gt; இன் ‘பூமியுடனான பிணைப்பு‘ இப்போது தன்னைக் கவர்ந்த ஒன்று என்றும் கூறினார் (சமீபத்தில், ரொறன்ரோவில் அவரது கண்காட்சி இடம்பெற்றது இங்கே குறிப்பிடத்தக்கது).&lt;br /&gt;‘நெக்லஸ்/தாலி‘, ‘அழகு - அசிங்கம் - அழகு‘, ‘கோழிகளும் சேவலும்‘, ‘கனவு‘,‘நவா‘,‘பிணைப்பு‘, ‘குளியலறை‘‘கடல்‘ ‘மாயா‘ என ஏறத்தாள முப்பது ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தன. காலத்திற்கும் படைப்பிற்குமான எண்ணிக்கை குறைவாக இருந்தது நிச்சயம் ஏமாற்றம்தான்.&lt;br /&gt;விமர்சனங்களில் தன்னைக் கவர்வது பார்வையாளரின் இரண்டாவது பார்வை (ஓவியரோடு சம்மந்தப்படாத) யைத் தொடர்கிற பதிவுதான் என்கிறார்.&lt;br /&gt;இவரது ஓவியங்கள் இயற்கையோடான சிநேகம், ஒரு கலாச்சாரத்தின் தடயங்களைத் தேடல், காதல், பெண் உடல் மறுஉருவாக்கம், குழந்தைப் பாலியல் என்பனவற்றை பேணுவன. அவற்றை விடவும், நீர் நிலைகள் தொடர்பான ஊடுருவலும் பாடல்களும் லயங்களும் இவரது படைப்புகளில் நீண்ட பாதிப்பை செலுத்துகிறதெனவும் தோன்றுகிறது.&lt;br /&gt;...&lt;br /&gt;ஒரு குழந்தை பால் குடிக்கிறது. தாயின் முகம், மார்பகம், தெளிவாக. முகத்தில் அளவு கடர் ஆனந்தமும், மோகமும். மார்பகத்தைப் நோக்கி வர்ணங்கள் நகர்கின்றன. பச்சையான அடர் சிவப்பும், மஞ்சளும், கறுப்பும் (முளைகள்) கூர்வாக, கிளர்ச்சி தருமாய் உபயோகிக்கப் பட்டிருக்கின்றன (‘கிறக்கம்‘). ஒரு ஜனரஞ்சக/குலுங்கும் மார்பு, முதிர் மார்பு, எல்லா மார்பிலும் வெள்ளையாய்க் கறுப்பாய் குரூரமாய் பெண்களுடையதல்லாத கரங்கள் (‘நித்யகல்யாணி‘). கத்தல் கேட்கும்போது கீழ் கார்பெற் இல் எந்த சங்கோஜமும் இல்லாமல் குந்தி, ஒலிக்கிற தொலைபேசி, தவிர்ந்த விசிறியின் சத்தம் மாத்திரம். ஒலி, நிதானம் என்பன நிற சிதறலாய் அலைகளாய் உணர்த்தப்பட்டு, வெள்ளை சுவர்கள் விஸ்தாரமாய் விரிய ஒரு கறுத்தப் பெண் உட்கார்ந்திருக்கிறாள். அவளைச் சூழ இருப்பவை துல்லியமாய் கீறப்பட்டுள்ளன (‘இரவின் பயங்கள்‘).&lt;br /&gt;‘அடுப்பும் நிர்வாணப் பெண்ணும்‘- மாட்டுச் சாணத்தின் நிறம் உலர்ந்த தரை மண் அடுப்பு. நெருப்பு எரிந்தது. தணலாய். உரு: ஆரோக்கியமான நடு வயதுப் பெண் அதற்கு மேல் நிற்கிறாள். அவளது இரு கரங்களும் இரு புறமும் இருப்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கின்றன. கைகள் சிலுவை போல இருபுறமும், தடித்த கயிறால் கட்டப்பட்டிருக்கின்றன. அடுப்பு எரிகிறது; அவளது மர்மங்களை அவை சுடவே செய்யும். எந்த நிழலுமற்ற கடும் இருள். விளக்கு வெளிச்சம் தணலாக எரிவதே போல தீட்டப் பட்டருக்கிறது. அப் பெண்ணுக்கு பலமான கண்களோ, முக அங்கங்களோ இல்லை. தனியே மர்மங்கள் மாத்திரம் மிகக் கூர்மையாக -தேவைக்கு அதிகமாக என்றும் சொல்லலாம்- தீட்டப்பட்டிருக்கிறது. அதிர்ச்சியான காட்சி இதுதான்- முகத்தில் வெளித்திருக்கிற மனிதன் கையில் வெள்ளை நுரைக்கும் போத்தலோடு அவளைப் பாக்கிறான். அவனது முகம் பயங்கரமாய் இருக்கிறது. அவன் அவளைத் தாக்குகிறான் போலவும், அவளது கணவன் போலவும், அவள் மார்பகங்கள் புதிரான முறையில் அரூபமாயும்... காட்சியில் குரூரம், பீதி, அதிர்ச்சி பலமாதிரியாய்ப் பதியப்பட்டிருக்கிறது. முலைகள் இல்லை. பெண் குறி: நுணுக்கமாய். முதல் இழை, இரண்டாம் இழை. ரோசா நிறம், பிறகு கடும் இரத்த நிறம்,புழை. அருகில் கூர்மையான உடைந்த போத்தல் ஓடுகள்.&lt;br /&gt;தொடர்ந்து நிகழ்வில் அதிகம் கவனத்துக்குள்ளான ஓவியங்கள் குறித்து பேசுகையில், "‘அவை ஆழ்மனத்தில் பாதிப்பு செலுத்துகிற', அதிகம் மாட்டு வத்தல்களையும் கயூக் காய்களையும் உண்ட பருவம் கிழப்பிய பால் இயல். ‘அடுப்பும் நிர்வாணப் பெண்ணும்‘ உருவான ஆண்டு எனது ஆறெழு வயதுகள்தான். முப்பதுகளின் தொடக்கத்தில் -எல்லா வெளிப்பாட்டு வடிவங்களிலும் தோல்வி உற்ற பிறகு- நான் அதை உருவாக்கி இருக்கலாம். ஆனால் தளம் கிராமிய மெல் வெளிச்ச மாலையில், சிறுமி, அறைமூலையில் தன் மர்மங்களை நோக்கி உபயோகித்த -போத்தல் மூடி, உள் நீர்- போன்ற உபகரணங்கள்தான்‘‘ என்றார்.&lt;br /&gt;இவை தவிர்ந்த ஏனைய அதிகமான ஓவியங்களில், ஒரு வீடிருக்கிறது. உடைந்த தலை, சிதறுபட்ட கோடுகள் (அவை எங்கும் முடிவதில்லை; எஃதோடும் ஒட்டுவதில்லை) மேலும் வட்ட வடிவான கட்டடங்கள், தூங்குகிற மரங்கள், தெரு விளக் கொழுக்குகள், அப்பால் மிகவும் நூதனமான இடங்கள்: (உ + ம்) அடந்த காடு -பெட்டி வடிவில்- கூரையாக ஓடுகிற ஆற்றுள் விழுந்திருக்கிற நிழல், சிற்பிகள், மீன்கள், இடங்கள் ... முக்கியமானவை இவர் கையாளுகின்ற வர்ணங்கள். ‘ர(த)hலி‘ ‘நிற்(த்)யகல்யானி(ணி)‘ போன்ற புது வார்த்தைகள் இற்கும் விளக்கங்கள் தரப்பட்டு, நிகழ்வில் முழுமை தந்தன.&lt;br /&gt;அவரது வரியில், ‘‘விஷ நாக்கு உடல் பூரா வியாபியும், சலனமற்று, மலைப் பாம்பென ஊரும் நதிக்குரிய குணாதிசயங்களை நிராகரிக்க வேண்டி வந்தது.‘‘&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="FONT-STYLE: italic"&gt;-ஓவிய விமர்சகர், ஆங்கில தினசரி ஒன்றில் &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;--&gt; &lt;a href="http://pirathi.blogspot.com/2004/12/blog-post_110188011731309006.html"&gt;வெளி ('சந்திப்பு: ஜனனி' தொடர்ச்சி)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://pirathi.blogspot.com/2004/12/blog-post_110188011731309006.html"&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9397992-110188002592804789?l=pirathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pirathi.blogspot.com/feeds/110188002592804789/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9397992&amp;postID=110188002592804789' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9397992/posts/default/110188002592804789'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9397992/posts/default/110188002592804789'/><link rel='alternate' type='text/html' href='http://pirathi.blogspot.com/2004/12/english-newspaper-article-translated.html' title='English Newspaper article Translated'/><author><name>புதிய கனா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='20' height='32' src='http://www.imagesofceylon.com/people/p19-full.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9397992.post-110689145346167396</id><published>2004-12-27T21:59:00.000-08:00</published><updated>2005-05-10T19:13:44.640-07:00</updated><title type='text'>வெளி</title><content type='html'>&lt;div align="left"&gt;இருபத்தி எட்டு, இருபத்தி ஒன்பது. &lt;a href="http://pirathi.blogspot.com/2004/11/blog-post.html"&gt;கற்கைக் காலங்கள்&lt;/a&gt;. பகுதிநேரம்: ஆங்கில இலக்கியம்.&lt;br /&gt;வழமைபோல &lt;em&gt;பிளானர்ஸ்&lt;/em&gt; இன் இறுதிப் பக்கங்கள் வெறுமையாய் இருக்கும். பாடப் புத்தகங்களுக்குப் பதிலாய் இலக்கிய இதழ்கள் - மொழிபெயர்ப்பு முயற்சிகள். ஆட்சி அமைப்புகளின் அறிமுக அட்டைகள், தேர்தல் அறிக்கைகள், மேலும் நடக்கும் ஓவியக் கண்காட்சிகளுக்கான நுழைவுச் சீட்டுக்கள்.&lt;br /&gt;இலைஉதிர்காலம். நிலஇரயில்ல போகேக்குள்ள நீண்ட மரங்கள் செம்மஞ்சள்ல கூர்மையோட சிவந்திருக்கும். கட்டிட வீதிகள் சுத்தம் செய்பவன், கடும்நீல யூனிபோர்ம் வகை உடையில் தினமும் மேப்பிள் இலைகளை கூட்டிக் கொண்டிருக்கிறத காணுவன். இந்த நாட்டிலேயே சந்தடி நிறைஞ்ச -போதைப் பொருட்கள்சார் பயங்கள் நிரம்பிய- கீழ்நகரம்தான் எனக்கு பிடித்துப் போனது. அங்கதான் என்னப்போல ஆன்மாக்கள், மக்டோனால்ட்ஸ் ஓரங்கள்லும் பஸ் தரிப்புகளிலும் சுருண்டு உறங்கிக் கொண்டிருக்கும், சகஉலகத்தின் மீதான பயமற்ற, சிநேகத்தோட. மாலைகளை, வளவளப்பான வயிறு தெரியிற, சிகரட் புகையிற விபச்சாரப் பெண்கள் ஆக்கிரமிப்பார்கள். சந்தடிகளுள் இயங்கிற இறுக்கமும், அமைதியும் நுட்பமாய், அவற்றூடாக ஒவ்வொரு முகங்களும் பயணிக்கிற தூரம் பரந்தது.&lt;br /&gt;இங்குதான் தினந்தினம் கொடுமை செய்கிற வீடுகளிலிருந்து, அரசு ஒழுங்கு செய்கிற வீடுகளிலிருந்து நாளுக்கு நாள், ஓடிவருகிற சிறுவர்களைச் சந்தித்தேன். எனக்கு வேண்டுமானால் ஒரு தங்கிடமும், உணவும் கிடைக்கலாம், அரசின் சலுகைப் பிச்சையில். அதை தவிர்த்தால் அவர்களைப் போலதான் நானும்... அம்மா அப்பரை விட்டு ஓடிவந்த, அவர்களை திருப்திப்படுத்தாத குழந்தை, வீட்டை விட்டு ஓடிப்போய், தனது உரிமைக்காக சத்தம்போட்ட வீடற்ற கிழவனுடன் படுத்துக் கொள்வதாய் கனவுகள்.&lt;br /&gt;சமீபத்தில் புலம்பெயர்இனப் பெண் ஒருத்தியை ரக்ஸி ஓட்டுனர்கள் -அவர்கள் கறுப்பாயும் இருந்துவிட்டால்...!- பலாத்காரப்படுத்தியிருந்தார்கள். இது இரவு நேரப் பயணிகளது பாதுகாப்பை அச்சுறுத்தியது.&lt;br /&gt;எனக்கு, சியாமின் கவனமும், பாதுகாப்புணர்ச்சியும் குழப்ப மூட்டின. தன்னுடைய வாழ்தலின் கடுமையை புகையில் மறக்க விரும்பிய என் தோழியைப்போல, என்னை நெருங்கிய அவனில் எனது தோல்விகளை, காயங்களை அள்ளி வீசினேன். உடம்பையும் ஆன்மாவையும் கொன்று போட்ட இறந்த காலத்து மனிதன்கள் மூலமாக, எந்த உறவையும் சந்தேகித்தேன். சியாம், ஓவியன். என் ஓவியங்களைப் பார்வையிடும்போது, இயல்பாய் நவாவைப் பற்றிக் கேட்பான் அதன் அழுத்தமான கோடுகளையும், கீறல்களையும் காட்டி. மறைகிற வடுக்களை பிய்க்கும் குரூரத்துடன், ‘‘ஓ! அவனோட நான் படுத்தனான், ஒருக்கா எங்கட வீட்ட, என்ர அறைக்குள்ள, பிறகு... ‘‘ என் சடுதி பேச்சில், அவன் என்ன பேசுவதென்ற தெரியாமல் முழிக்க, ‘‘அவன் இல்லாமப் போன பிறகு நெடுங்காலம், தலைவணியப்... ‘‘ அவனது முகத்தைப் பார்த்துவிட்டு நிறுத்துவேன். வருத்தத்தோடு, ‘‘வதைக்கிற எண்டு முடிவெடுத்தாச்சு‘‘ சொல்லிவிட்டு, என்னை எந்த பயமும் ஊட்டாது, பாத்துக்கொண்டிருக்கிற கண்களை, சற்றே சலிப்புடன் பார்த்தேன்.&lt;br /&gt;எனக்கும் வலித்தது.&lt;br /&gt;அவன்பால் சின்னச் சின்னத் தளர்வுகள். அவனா நானா உச்சத்திற்கு அழைத்துச் சென்றோம் என உறவைக் குலைத்த அவர்கள்; கண்ணில் கண்ணீரை வர வைக்க காத்திருந்த விழிகள்; இரவுகளில் அருவருத்துகிற ஆண் இடுப்புக் கீழ்கள். இவன் என்ன செய்வான்... எனது வேதனைகளின் பிரவாகம், தொடர் துன்புறுத்தல்களின் அடைத்தல், நான் அழுதேன், இனிமேலும் அவன்முன் எச் சங்கடமும் அற்று அழுவேன் என. கடந்து போன காலத்தில் பிடித்தமான மனிதன்களின் பெயர்களை மட்டுமே உச்சரிக்க விரும்பிய என் உதடுகள், மஞ்சள் நிறத்தை விரும்பிய வின்சன்ற் வான் கோ வை அவனது தூரிகையின் வீச்சிற்காகவும், கிளர்விற்காகவும், தொடரலாயின.&lt;br /&gt;புத்தகக் கடைகளில் ஓவியர்களின் சுயசரிதங்கள், படைப்புகள், சுயப்பிரதிமைகளை மேந்தபடி, உலகப் புகழ்பெற்றவர்களை அவர்கள் படைத்த பெண்நிர்வாணத்தில் இருந்த 1/வணங்கல் 2/வளவளப்பு 3/நளினம் ஊடான -அவர்கள் விரும்பிய- பெண் உருவாக்கம் என வரிசைப்படுத்தியபடி இருந்தேன் (வரிசைப்படுத்தல் பிறகு ஒரு நோயாக மாறிவிட்டது). பெண் மர்மங்களில் இருக்கிற காட்டுத்தனமான முடிகளை மறைத்துக் கீறிய ஒவியர்களை வெறுத்து உடம்பைச் சக்கை பிழியிற இழப்போடும் வெம்பலோடும் திரும்பிற ஒவ்வொரு மாலையிலும், மலைப் பகுதிகளிலும், ஏரிக் கரைகளிலும் ‘சியாம்ம்ம் ‘ எனப் பெரும் குரல் எடுத்துக் கத்தினேன். என்மேல் விழுற எல்லா அற்புதங்களையும், அசிங்கங்களையும் கண்வெட்டுற வர்ணங்களோடு பூச ஒரு மேனி.&lt;br /&gt;அதன் மூலமாய் மோகத்தை, அடர்த்தியான அன்பை, சுதந்திரத்தை, உரிமையை ஏற்றி, என்னுடைய அன்பை, முரட்டுத்தனமாய் கட்டுப்படுத்துகிற நிர்ணயங்களை, கீழ்நகரத்த்தில், மாசற்ற குழந்தைகளிடமும், நாடோடிப் பாடல்களை முணுமுணுத்தவாறே நகர்கிற பூர்வீகக் குடிகளிடமும், மாலைக் குடியின் மகிழ்ச்சியோடும் பிரகாசத்தோடும் நிறைந்திருக்கிற பாடல்களுடன் மறைகிற புதிய மனிதர்களிடமும் இழந்தேன்.&lt;br /&gt;பரந்த அவன் கூர்முகத்தில், உள் மறைகிற கடினமுறும் கண்ணில், கறுத்த உதட்டில், நான் காது வழி நெருத்தி முத்தமிட்டேன். உயர்ந்த கட்டிடங்களுள், அடர் வனத்தில் அகழ்வாராய்ச்சியில் கண்டடையமுடியாத ஆழத்தில் அவனது காதல் தோண்டப்பட்டு விட்டது.&lt;br /&gt;அவன், இந்த உலகத்தில் அனைவரும் வாழ்வதற்கான தத்துவங்களை நேசித்தான். உழைப்பில் ஒளிர்கிற நெற்கதிர்களாய் அது வீச, புகைந்திருந்த அவன் உதட்டை நிரந்தரமின்மையிலும் பாதுகாப்பின்மையிலும் உறவுகள் தந்த நம்பிக்கையின்மையிலும் இருந்து வெளியேற்றினேன்.&lt;br /&gt;‘சிறுவர்‘ ஒரு கனவின் நிர்மாணமாய் எழுந்த பிறகு, இடைவெளிகள் குன்ற அவனும் நானும் நடக்க ஆரம்பித்த சொற்ப நொடிகளில், மழையின் குதூகலத்தில், ஆடைகளின் சுமையைப் பொருட்படுத்தாது, குடைகளுள் விரைகிற மனிதர்களுள், பொருட்டற்று, உல்லாசமாய், எனது பாடல்களை பாட ஆரம்பித்தேன். சிருங்காரத்தோடு தழுவித் தணியிற, உயிரைத் தீண்டிற, உண்மைக்கான பாடல்கள்.&lt;br /&gt;‘இரத்தத்தில் உருகுகிற நிலையில் என்னை வரைந்த என் அன்பே.  அன்று, ஒரு கனவுக்குப் பிந்திய வாழ்க்கையை, நான் வாழுவதாகச் சொன்னாய். தழுவிடும் உன் ப்ரியத்துடன், பழைய உடைந்துபோன உறவுகளைச் சொல்கையில் நீ அழுதாய்.  களத்தில் ரத்தமும் சதையுமாய் கிடந்த உடலை, அதன் ஆன்ம வீரத்தை, அதன் விந்துக்களின் சுகத்தை, இன்னமும் உயிராய் அவனோடு எழுகிற தீராத காதலை உன்னோடு பகிர்ந்தேன்.  தொடர்ந்த நம் இருவரின் ஒத்த அழுகையில், மொழியின் அநாவசியத்தை கற்றேன்.  உடம்பில் ஆரம்பித்த ஓராயிரம் கேள்விகள் விழுந்து மடிந்தன.  எனது மோகம் உன்னில் மோதி மோதி எழுகிறது- எப்போதும் அது உன்னில் களைப்படைந்து விடுவதில்லை.&lt;br /&gt;அன்று அந்த அபூர்வ வகை மரங்கள் தூங்கி விட்டன.  நீ நீண்ட காலத்துக்கு முதல், தொலைவில் இருந்தபோது, எழுதியிருந்ததை நான் சொல்கிறேன்: ‘ஏதாவதொரு கேள்வியில் ஒருவரின் வாழ்வில் மாற்றத்தை உண்டு பண்ணிவிட முறியும் அவசரம் பிடித்தவள்.‘&lt;br /&gt;நான் கனவு காண விரும்புகிறேன், உனது மடியில் குழந்தையாய் உறங்கி, ரௌத்திரம் அடங்கும் வரை. எதுவும் உன்னில் அடங்காதென்ற போதும்... நித்தமும் கனவு காணுகிற எனது ஆன்மா, அதன் களைப்பும் பலமும் பலவீனமும், கொஞ்சம் மிதமானவை, கலங்கலானவை, தனிமையானவையும்கூட.  அவற்றின் சகல சின்னத்தனங்களுடனும், நீ என்ன நினைப்பாய் என்கிற மூன்றாம் குரல் இன்றி உன்னோடு, என் இழந்த இயல்புகளை, வர்ணங்களை, வாசனையைத் தேடிச் செல்லலாம்...  உன்னை நான் இறுக்கிக் கொள்கிற போது, ‘திருமணம் நம்மை அழித்து விடும்‘ எவளோ ஒரு பெண் எழுதியதை கிசுகிசுக்கிறேன்.  அவள் கனத்த பயத்துடன், நம்பிக்கையின்மையுடன், தொடர்ந்து எழுதிய ‘அருகிலிருந்து நெருக்கமாய் நேசித்தால் வெகுவிரைவில் பழகி அலுத்து விடுவாய் ஆதலால் காதல், என்றென்றைக்குமாய் தொலைவே, தூர இருந்து‘ என்கின்ற வரிகளைப் புறந் தள்ளி விடுகிறேன்.&lt;br /&gt;ஒவ்வொருநாளும் வானம் உன் கீழே கிடந்தது. உனதிருப்பு, உனது குரல், என்னை இருத்த, சாய்மானத்தில் சிலிர்ப்புகளை எடுத்தெறிகிறது குழந்தைகள் குரல்,&lt;br /&gt;எனது பாடல்கள் வீதியில், காற்றில் நிறைந்தன. &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;strong&gt;...&lt;/strong&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;இன்று, என் கற்றைகளில் மசுக்குட்டி சுருளுகிற வெள்ளை ஒளியாய் முதுமை. அது, அதன் பச்சை இலைகளின் குளிர்மையோடு கோதுகிறபோது, என் பருவங்களில் அழகானது இதுதான். ஒரு &lt;em&gt;பென்&lt;/em&gt;னை வைத்து, நிற்கவேண்டும் என்ற அவன்களின் சுரத்தற்ற காமத்தை மீறி, விழுந்து நிற்கும் மார்பகங்களோடு நிமிர்ந்திருக்கிறேன்.  ஆழ ஊன்ற முனையும் வேர்.  பாழ் மரங்கள்.  தூரத்தே கடல் மேல் மின்னல்.  இதுவரையில், பச்சை வர்ணம் நீரில் தெறிக்கிற குளிர்மையும், நீளமும் எழுகின்ற சிருங்காரமும் நானாக இருந்தேன்.&lt;br /&gt;கீழ்நகரத்தில், விரக்தியோடு உலவிக் கொண்டிருக்கும் அலைச்சலுக்குள்ளானவர்களிடம் நம்புவதற்கான எந்த தடயங்களும் அற்று தனிமை தங்கி விட்டிருக்கும். நானோ, என்னுடைய கால்களின் விலங்குகளை இங்கிருந்துதான் சலங்கைகளாய் ஆக்கினேன். &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;...&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;ஒரு மழைக்கால முன்றலில், அக் கூடாரத்தின் தாழ்வாரத்தில் விழுகிற வெளிச்சத்தில், ஆடிக் கொண்டிருக்கிற பெண்ணின் எதிர்காலத்தை நான் எப்போதும் உணர்கிறேன்.  ஊரில் படஅறைக்கு, மூலை ஓட்டையால் பாம்பு வருகிற, குடிகார ஆண்களின் யௌவன மாலைகளூடாய், கங்காணிகள் வந்து லயப் பெண்களை கடத்திப் போகிற கதைகளில் மூழ்கி எழுந்து கழிந்த பருவங்கள்.  இப்போது விரிந்திருக்கிற புத்தகமூடாக எழுகிற உறவின் தாபமும் எழுச்சியும் என்னை ஆழமாய்த் தொந்தரவு செய்வதில்லை.&lt;br /&gt;மழை விட்டு மரக் கிளையிலிருந்து விழும் கடைசித் துளிகளுக்குப் பின்னும் எஞ்சியிருக்கும் ஈரத்தைப் பற்றினது என்னோட நம்பிக்கைகள்.&lt;br /&gt;~&lt;br /&gt;&lt;span style="FONT-STYLE: italic;font-size:85%;" &gt;(‘வானலையில் அடுத்ததாக‘ இடம்பெறாதது)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9397992-110689145346167396?l=pirathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pirathi.blogspot.com/feeds/110689145346167396/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9397992&amp;postID=110689145346167396' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9397992/posts/default/110689145346167396'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9397992/posts/default/110689145346167396'/><link rel='alternate' type='text/html' href='http://pirathi.blogspot.com/2004/12/blog-post_27.html' title='வெளி'/><author><name>புதிய கனா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='20' height='32' src='http://www.imagesofceylon.com/people/p19-full.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9397992.post-111440869553015465</id><published>2004-11-30T22:47:00.000-08:00</published><updated>2005-05-09T21:38:20.350-07:00</updated><title type='text'>பகுதி II (பிரசுரமாகாதவை)</title><content type='html'>*மாயா எழுத்துகள்&lt;br /&gt;&lt;a href="http://utopiann.blogspot.com/2005/04/part-of-incomplete-fiction.html"&gt;-1- &lt;span style="FONT-WEIGHT: bold"&gt;நடந்து திரிந்துவிட்டு, வந்து கேட்டாயானால்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9397992-111440869553015465?l=pirathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pirathi.blogspot.com/feeds/111440869553015465/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9397992&amp;postID=111440869553015465' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9397992/posts/default/111440869553015465'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9397992/posts/default/111440869553015465'/><link rel='alternate' type='text/html' href='http://pirathi.blogspot.com/2004/11/ii.html' title='பகுதி II (பிரசுரமாகாதவை)'/><author><name>புதிய கனா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='20' height='32' src='http://www.imagesofceylon.com/people/p19-full.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9397992.post-111499168327892825</id><published>2004-11-10T16:54:00.000-08:00</published><updated>2005-05-09T22:33:09.303-07:00</updated><title type='text'>கற்கைக் காலங்கள்</title><content type='html'>&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9397992-111499168327892825?l=pirathi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://pirathi.blogspot.com/feeds/111499168327892825/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9397992&amp;postID=111499168327892825' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9397992/posts/default/111499168327892825'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9397992/posts/default/111499168327892825'/><link rel='alternate' type='text/html' href='http://pirathi.blogspot.com/2004/11/blog-post.html' title='கற்கைக் காலங்கள்'/><author><name>புதிய கனா</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='20' height='32' src='http://www.imagesofceylon.com/people/p19-full.jpg'/></author><thr:total>0</thr:total></entry></feed>
